பக்கம் : 1259
 

      கந்தருவர் நாடகம் கண்டும் இந்திரனோடு இருந்தும் இளம்பிடியார் பாராட்ட
மணிமாட உச்சியிலே உறைந்தும் இன்புறுவர் என்க.

(942)

 
2053. கந்தாரங் களித்தனைய
பனிமொழியார் கண்கவர
1மந்தார வளத்திடையார்
மணிமுழவி 2னிசையரங்க
மந்தார மணியரங்கி
னெனும்வார்த்தை யவையல்லால்
செந்தாரோய் தேவர்கள் 3செய்
திறற்றொழின்மற் றுடையரே.
 
     (இ - ள்.) கந்தாரம் களித்தனைய - கந்தாரம் என்னும் பண்ணை நுகர்ந்து
களித்தாற்போன்ற களிப்பை நல்கும், பனி மொழியார் - குளிர்ந்த மொழிபேசும்
தேவமகளிரின், கண்கவர - கண்களைக் கவரும் பொருட்டு, மந்தாரவனத்து - கற்பகச்
சோலையின்கண் உள்ள, மணிமுழவின் இசை அரங்கம் - அழகிய முழவுகளின்
முழக்கத்தையுடைய கூத்தரட்டரங்கும், மணி அரங்கு - அழகிய அவையும், மந்தாரம் -
மறைவிடமும், இடையார் - ஆகிய இவற்றினிடைய பயிலாநிற்பர், எனும் வார்த்தை அவை
அல்லால் - என்று கூறும் மொழியை அன்றி, செந்தாரோய் - செவ்விய மலர்மாலையை
உடைய மன்னனே, தேவர்கள் செய் திறல் தொழில் - அவ்வமரர்கள் வருந்தி ஆற்றலால்
ஆற்றுதற்குரிய கடுந்தொழில், வேறு உண்டு என்னும் சொல் மற்றுடையரோ - வேறு
பெறற்பாலரோ அல்லர், (எ - று.)

     மந்தரம் - மந்தாரம் என நீண்டது; மறைவிடம்.

     தேவர்கள் பனிமொழியாருடன் கற்பகச் சோலைகளிலே உள்ள ஆடரங்குகளில்
ஆடிப்பாடி இன்புறுவர் என்க.

(943)

 
2054. தீர்த்தங்க 4டிறந்தவர்க்குச் சிறப்போடு திசையெல்லாம்
தேர்த்தங்க ணொளிபரப்பச் செல்பொழுதுந் தம்முலகில்
கார்த்தங்கு 5மயிலனையார் காமஞ்சேர் கனிகோட்டி
தார்த்தங்கு வரைமார்ப தம்முருவி னகலாரே.
 

     (பாடம்) 1மந்தாரணத்திடையர். 2 னிசைவாங்க. 3செய்தொழின்மற் றுடையரோ. |

     3 டிறைவர்க்குச். 4 மயிலனைய.