பக்கம் : 1260 | | (இ - ள்.) தீர்த்தங்கள் திறந்தவர்க்கு சிறப்போடு - தீர்த்தங்கரர்களுக்கு திருவிழாச் செய்தலோடு, திசையெல்லாம் - திக்குகள் தோறும், தேர்த்து - கூடி, அங்கண் - அவ்விடத்தே, ஒளிபரப்ப - தம் மொளியைப் பரப்புதற் பொருட்டும், செல்பொழுதும் - செல்லும் பொழுதும், தார்த்தங்கு வரைமார்ப - மாலையணிந்த மலைபோலும் தோளையுடைய மன்னனே, கார்த்தங்கு மயில் அனையார் - கார்காலத்தே மகிழ்ந்து வதிகின்ற மயில் போலும் சாயலையுடைய மகளிரின், காமஞ்சேர் - காமவின்பம் எய்துதற்குக் காரணமான, கனி கோட்டி - நெஞ்சத்தைக் கனிவிக்கின்ற கூட்டத்தை, தம் உருவின் அகலார் -தம்முடைய உருவத்தினின்றும் அகற்ற மாட்டார், (எ - று.) தேவர்கள் இறைவன் பூசனை விழா முதலியவற்றைக் காணும் போதும் தம் காதலிமாரைப்பிரியார் என்க. | (944) | | 2055. | இமையாத 1செங்கண்ண ரிரவறியார் பகலறியார் அமையாத பிறப்பறிய ரழலறியார் 2பனியறியார் சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு கெடுமுடியார் அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே. | (இ - ள்.) இமையாத செங்கண்ணர் - இமைத்தலில்லாத சிவந்த கண்களையுடையராய், இரவறியார் - இஃது இராக்காலம் என்றும் அறியமாட்டார், பகல் அறியார் - இது பகற்காலம் என்றும் அறியமாட்டார், அமையாத பிறப்பு அறியார் - நிலையில்லாத பிறவித் துன்பத்தையும் அறியமாட்டார், அழல் அறியார் - வெப்பத்தை உணரமாட்டார், பனியறியார் - பனியாலுண்டாகும் துயரம் உணரமாட்டார், சுமையாகி மணிமாலை சுடர்ந்து இலங்கும் நெடுமுடியார் - பாரமாக மிக்கு மணிமாலைகள் ஒளிவீசித் திகழ்கின்ற நீண்ட முடியணி அணிந்தவர் ஆகிய, அமையாத நல்லுலகில் - பெருந்தவம் செய்துடையார்க்கன்றிப் பொருந்த மாட்டாத நல்ல வானுலகிலே வாழும், நகைமணிப் பூண் அமரர் - விளங்குகின்ற மணியணிகளையுடைய தேவர்கள், (எ - று.) தேவர்கள் இரவு பகலறியார், பிறப்பிறப்பின் துயரறியார், மழை வெயில் பனிகளாலாய இன்னலிலர் என்க. | (945) | | 2056. | அணுவளவாய்ச் சிறுகுதன்மற் றதிநுட்ப மிகப்பெருகல் நணியவர்போ னினைத்துழியே நண்ணுறுதல் விழைதகைமை | |
| (பாடம்) 1 செங்கண்ணிரவறியா. 2 குளிரறியார். | | |
|
|