பக்கம் : 1262
 

     தேவர்களிலும் நன்ஞானம் நற்காட்சி முதலியவற்றில் சிறந்தோர்க்குச் சிறந்த இன்பமும்
அல்லாதார்க்குக் குறைந்த இன்பமுமே உள என்க.

(947)

 
2058. 1கனைகதிராக் கதிர்கலந்து
கண்ணிலங்கு திருமூர்த்தி
2புனைகதிரொண் மணிப்படிவம்
பொலிந்ததுபோற் பொலிந்ததன்மேல்
வனைகதிரின் மணிமுடியும்
மாணிக்கக் கடகமுமென்
3றினமுதலாச் சுடர்ந்தினிதி
னியல்பாய்நின் றெரியுமே.
 
     (இ - ள்.) கனைகதிராக் கதிர் கலந்து - செறிந்து சுடருதலையுடைய கதிர்க்கற்றைகள்
பரவி, கண்ணிலங்கு - இடமனைத்தும் திகழ்ந்து விளங்கும், திருமூர்த்தி - அருகபரமனுடைய,
புனைகதிர் ஒண் மணிப்படிவம் - ஒப்பனை செய்யப்பட்ட ஒளியையுடைய ஒள்ளிய
மணியுருவம், பொலிந்தது போற் பொலிந்து - திகழ்வதைப் போன்று ஒளிவட்டத்துடனே
விளங்கி, அதன்மேல் - அவ்விளக்கத்தின் மேலும், வனைகதிரின் மணிமுடியும் -
இயற்றப்பட்ட ஒளியுடைய முடிக்கலனும், மாணிக்கக் கடகமும் என்று இன முதலா -
மாணிக்க மணியாலியன்ற கடக அணியும் என்று கூறப்பட்ட இவற்றின் இனமயாகிய பிற
அணிகலன் முதலியனவும், சுடர்ந்து - ஒளிவீசி, இனிதின் - காட்சிக்கின்பமாக, இயல்பாய் -
அவ்வானோரின் திருமேனி, தன் இயல்பானே, நின்று எரியும் - நிலைநின்று ஒளிரும்,
(எ - று.)
    
     தேவர்கள் இயல்பாகவே ஒளிவட்டத்தாற் சூழப்பட்டிருப்பர். மேலும் அணிகலன்
முதலியவற்றாலும் ஒளிபடைத்துத் திகழ்வர் என்க.

(948)

 

     (பாடம்) 1கணைக்கதிர்க் கதிர். 2புனைகதிர். 3றெனமுதலாச் சுடரணிந்து.