பக்கம் : 1263 | | | 2059. | செழுந்திரட்பூம் 1பாவைகளுந் திகழ் 2மணியின் சுடர்க்கொழுந்தும் எழுந்திலங்கு 3மேனியரா 4யெரியுமணிக் கலந்தாங்கி மொழிந்துலவாக் காரிகையார் முலைமுற்றா விளமையார் அழிந்தலராக் காரிகைமா ரமரரசர் தேவியரே. | (இ - ள்.) செழுந்திரட்பூம் பாவைகளும் - தாம் கொண்டுள்ள செழித்த மலராலே புனையப்பெற்ற விளையாட்டுப் பதுமைகளும், திகழ் மணியின் சுடர் கொழுந்தும் - விளங்குகின்ற மணிகளின் ஒளிக்கதிர்களும், எழுந்து இலங்கும் மேனியராய் - எழுந்து பரவுகின்ற திருமேனியுடையராய், எரியு மணிக் கலந்தாங்கி - மிளிருகின்ற மணி அணிகலன்களையும் அணிந்து, மொழிந்து உலவாக் காரிகையார் - கூறிமுடித்தலியலாத வனப்புடையராய், முலை முற்றா இளமையார் - எப்பொழுதும் முதிராத முலையையுடைய இளமைப் பருவமே நிலைக்கப்பெற்றவராய், அழிந்து அலராக் காரிகைமார் - அழகழிந்து பருத்தல் இல்லாத மகளிர்கள் ஆவர், அமரரசர் தேவியர் - தேவ மன்னர்களின் மனைவிமார்கள், (எ - று.) அமரர் தேவியர் இலங்கு மேனியராய்க் கலந்தாங்கி காரிகையுடைய ராய் இளமை மாறாதவராய்த் திகழ்வர் என்க. | (949) | | 2060. | இன்பமே பெரிதாகி யிடையறவின் றி 5மைப்பளவும் துன்பமொன் 6றில்லாத துறக்கத்திற் பெருஞ்செல்வம் மன்பெருமா தவத்தினால் வருமொருநா 7ளீறுடைய 8தன்பதன்கண் 9மிசையேயென் றடிகடரு பொருடெளிந்தார். | |
| (பாடம்) 1 பாவையும். 2 மணிக்கொழுந்துப்போல். 3 மேனிய. 4 எரிமணிக். 5 மைப்பனவும். 6 றில்லாததவத்தாற். 7 றீற்றுடைத். 8என்பதன்கண். 9மிசையேயாரடிகடரு. | | |
|
|