பக்கம் : 1265
 
 
2062. இரண்டாகு முதலவர்கட்
     கேழீரைந் தீரேழாய்த்
1திரண்டிரண்டாய் மூவுலகத்
     2தொழிந்தவர்சேர் பிரண்டிரண்டாய்
3அரண்டகவந் தேறிப்பின்
     னாரணவச் சுதருலகின்
மருண்டாய மணிமுந்நீர்
     பதி 4னொன்றற் கிருமடியே.
 
     (இ - ள்.) இரண்டாகும் முதலவர்க்கு - பவணர்களைக் காட்டினும் இருமடி
வியந்தார்க்கு ஆகும் வாழ்நாள், ஏழ் ஈரைந்து ஈர் ஏழ் ஆய்த் திரண்டு - எஞ்சிய
மேல்மேல் உயர்ந்த தேவர்கட்கு முறையே ஏழுகடலும் பத்துக்கடலும் பதினான்கு
கடலுமாய்ப் பெருகி, இரண்டாய் - மேலும் இரண்டு சேர்ந்து பதினாறு கடலுமாய்,
மூவுலகத்து ஒழிந்தவர் - மூவகைப் பட்ட இத் தேவபூமியின் மேற்பட்டவர்கட்கு, இரண்டு
இரண்டாய் சேர்பு - மேலும் இரண்டு இரண்டு கடல்களைக் கூட்டிப் பதினெட்டும்
இருபதுமாய், அரண்தக வந்து ஏறி - தம் வாழ்நாள் காவல் பொருந்தச் சென்று உயர்ந்து,
ஆரண அச்சுதர் உலகின் - மறை பயின்ற அச்சுதருலகத்தின்கண் வாழ்வார்க்கு, மருண்டு
ஆய மணிமுந்நீர் - வியப்பைத் தருதற்குரிய பெருமைத்தாய கடல், பதினொன்றற்கு
இருமடி-இருபத்திரண்டாம், (எ - று.)

(952)

 
2063. ஆங்கவர்மே லமரரசர்
     மும்மூவர்க் கொரோவொன்றாய்
ஓங்கினர்மே லொன்பதின்மர்க்
     கொன்றொன்றா யவர் 5மேலார்
6பாங்கினுறப் பெருகுவன
     பதினைந்திற் 7கிருமடிமேல்
8வாங்கொலிநீ ரொருமூன்று
     வாழ்வென்ப மணிமுடியாய்.
 

     (பாடம்) 1 திரண்டதன். 2ஒழிந்தவர்கட். 3 உரண்டகவந். 4 னொன்றிற்.
     5மேலாற். 6பாங்கினிற். 7கிருமடிய. 8ஓங்கொலிநீ.