பக்கம் : 1266
 

     (இ - ள்.) ஆங்கு அவர்மேல் அமரரசர் மும்மூவர்க்கு - அவ்வச்சுத உலகில்
வாழ்வார்க்கு உயர்ந்த அகமிந்திரலோகத்தின் ஒருபகுதியில் வாழும் அகமிந்திரதேவர்
ஒன்பது வகையார்க்கும் ஒரோ ஒன்றாய் - ஒவ்வொரு கடலாய் உயர்ந்து, ஓங்கினர் மேல்
ஒன்பதின்மர்க்கு - அவரினும் உயர்ந்த, நாவணு திசையில் வாழும் ஒன்பது வகையார்க்கு,
ஒன்று ஒன்றாய் உயர்ந்து - ஒவ்வொரு கடல் உயர்ந்து, அவர் மேலார் - அவரினும்
உயர்ந்தோராய், பஞ்சாநுத்தரத்தில் வாழும் தேவர்கட்கு, பாங்கின் உறப் பெருகுவன -
அவ்வெண்ணயலே கூடிப் பெருகும் வாழ்நாள், வாங்கு ஒலிநீர் - கடல், பதினைந்திற்கு
இருமடிமேல் ஒருமூன்று வாழ்வு என்ப - முப்பத்து மூன்று வாழ்நாள் எல்லை என்று
அறிஞர்கள் கூறுப, மணிமுடியாய் - மணியழுத்திய முடியை உடைய அரசனே, (எ - று.)

     வாங்கொலி நீர் என்றது, கடல் என்னும் பெயர்மாத்திரையாய் எண் குறித்து நின்றது.

(953)

 
2064. ஆயிடைய வமரரசர்
     திறம்வினவி னணங்கணையார்
1வேயிடைமென் பணைப்பொற்றோள்
     விழைவின்றிப் பெரிதாகி
2ஏயிடையோ ரறவின்றா
     வின்பஞ்செய் திருமூர்த்தி
3சேயிடையொள் ளொளிநிழற்றச்
     செம்மாந்தா ரிருந்தாரே.
 
     (இ - ள்.) ஆயிடைய அமரரசர் திறம் வினவின் - கற்பலோகத்தின் மேலவாய
அகமிந்திரலோக முதலியவற்றுள் வாழும் தேவ மன்னர்களின் தன்மையை வினவுதியாயின்,
அணங்கு அணையார் - தெய்வ மகளிர்களுடைய அணையை ஒத்த, வேயிடை -
மூங்கில்கள் வருந்தும், மென் பணைத்தோள் - மெல்லிய பருத்த தோளின்கட் படிதற்கு,
விழைவின்றி - விரும்பாதபடி, பெரிதாகி - மிக்கு, ஏய் இடை (ஓர்) அறவு இன்றாய் -
பொருந்தும் இடையறவு சிறிதும் இன்றி, இன்பம் செய் திருமூர்த்தி - இன்பத்தை
விளைக்கின்ற அருகபரமனுடைய ஒளிவட்டத்தின்; சேய் இடை ஒள்ளொளி நிழற்ற -
சேய்மைக் கண்ணதாகிய மிக்க ஒளி தம்மேற் பரவாநிற்ப, செம்மாந்தர் இருந்தாரே - யாரே
எம்மை ஒப்பார் என்று செம்மாந்து வீற்றிருந்தனர், ஓர் : அசை, (எ - று.)
 
 

     (பாடம்) 1 வேயிடைப் பணைமென்றோள். 2 ஏயிடையறவின்றாயுறவின்றா.    
     3 சேயிடை ஒளிநிழற்ற.