பக்கம் : 1273
 
பயாபதி “வீடெய்த முயல்வல்“ என்றல்
2075. வடுவறு மாதவ னுரைப்ப 1மாண்புடை
அடிகள தறவமிர் துண்ட வாற்றலான்
முடிவுகொ ளுலகெய்த முயல்வ னென்றனன்
விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே.

 
     (இ - ள்.) வடு அறு மாதவன் - பழியில்லாத பெரிய தவத்தையுடைய அத்துறவி,
உரைப்ப - இவ்வாறு கூற, விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தன் - வீசுகின்ற சுடருடைய
மணியாலியன்ற முடியை அணிந்த வெற்றிமிக்க பயாபதி வேந்தன், மாண்புடை அடிகளது -
மாட்சிமையுடைய அடிகளார் உரைத்தருளிய, அற அமிர்து உண்ட ஆற்றலான் - அறமாகிய
அமிழ்தத்தை உண்ட வலிமை யுண்மையால், முடிவு கொள் உலகு எய்த - வீட்டுலகத்தினை
அடைதற்கு, முயல்வன் என்றனன் - அடியேன் முயலத் துணிந்தேன் என்று இயம்பினான்,
(எ - று.)

     வடுவறு மாதவன் என்றார், அத்துறவி நல்லாசிரியராந்தன்மையுடையர் என்பது
தோன்ற, பயாபதியும் தான் மேற்கொண்ட செயலைக் கடைப்பிடித்து நின்றொழுகும்
நன்மாணாக்கனே என்பது தோன்ற “வென்றி வேந்தன்“ என்றார்.
 

( 7 )

அமைச்சர் பயாபதிக்குக் கூறல்

2076. மிக்கெழு போதிகை விலக்க றக்கதன்
றொக்கநன் றுடன்பட லுலக 1மேன்றெனத்
தக்கவாய் மொழிந்தவத் தரச னேர்ந்திலன்
தொக்கவான் புகழவற் கமைச்சர் சொல்லினார்.
 
     (இ - ள்.) உலகம் ஏன்று - மன்னன் கருத்தை உலகினர் ஏற்றுக் கொண்டு, ஒக்க -
பொருந்த, உடன்படல் நன்று - இசைதல் நன்றாம், என என்று கருதி, தவத்தரசன் -
அத்துறவிப் பெரியோன், மிக்கு எழு - விரைந்து எழுக, போதி - அந்நெறியிலே செல்,
விலக்கல் தக்கது அன்று - உன் செலவைத் தடுத்தல் யார்க்கும் தகுதியாவ தொன்றன்று,
என - என்று, தக்க வாய்மொழி - அச் செவ்விக்கேற்ற மெய்ம் மொழிகளைக், கூற,
நேர்ந்திலன் - முன்வந்தானில்லை, தொக்கவான் புகழவற்கு - திரண்ட பெரும்புகழுடைய
பயாபதி மன்னனுக்கு, அமைச்சர் சொல்லினார் - அமைச்சர்கள் பின்வருமாறு
கூறுவாராயினர், (எ - று.)
 

     (பாடம்) 1 மன்னவன். 2 மென்றெனத்.