பக்கம் : 1278 | | | 2083. | புண்ணிய முலர்ந்தபின் பொருளி லார்களைக் கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல் எண்ணில ளிகந்திடும் யாவர் தம்மையும் நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே. | (இ - ள்.) பொருள் இலார்களை - கைப்பொருள் உலர்ந்து நல்கூர்ந்தாராயினாரை, கண்ணிலர் துறந்திடும் - கண்ணோட்டம் இலராய் அகற்றி விடுகின்ற, கணிகை மார்கள்போல் - வரைவின் மகளிரைப்போன்று, புண்ணியம் உலர்ந்தபின் - ஆகூழ் கழிந்தவுடனே, எண்ணிலள் - அவர்தம் கேண்மையை நினையாதவளாய், இகந்திடும் - நீங்கிப்போவாள், யாவர் தம்மையும் - எத்திறத்தாரிடத்தும், நண்ணிய நண்பு இலள் - பொருந்திய அன்பு இல்லாதவள், நங்கை வண்ணம்-திருமகளின் தன்மை இஃதாம், (எ- று.) “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கு மதுவிளிந் தற்று“ பொருள் உலர்ந்தவுடனே கணிகையர் தம்மை மருவிய மைந்தரைப் புறக்கணித்து விடுவது போன்று. திருமகளும் ஆகூழ் அகன்றவுடன் தன்னையுடையோரை ஒருவி நீங்குவள் என்க. | ( 15 ) | | 2084. | 1உற்றுநன் கொருவர்கண் ணிற்கு மாய்விடின் மற்றவர் குணங்களை மறைத்து மாண்பிலாச் செற்றமுஞ் சினங்களுஞ் செருக்குஞ் செய்திடும் கற்றவர் தம்மையுங் கழற நோக்குமே. | (இ - ள்.) உற்று நன்கு ஒருவர்கண் நிற்கும் ஆய்விடின் - ஒரோவழி பொருந்தித் திண்ணிதின் ஒருவரிடத்து நிலைத்து விடுவாளாயினும், மற்று அவர் குணங்களை மறைத்து - அவ்வழி அவர்தம் அன்பே அறனே ஈகையே வாய்மையே இன்னோரன்ன நற்குணங்களையெல்லாம் அழித்தொழித்து, மாண்பிலா - மாட்சிமையில்லாத, செற்றமும் - பகைமையும், சினங்களும் - வெகுளியும், செருக்கும் - செருக்குடைமையும், செய்திடும் - இன்னோரன்ன தீக் குணங்களையே இறப்ப மிகுவிக்கும், கற்றவர் தம்மையும் - மெய்ந்நூற் கல்வியுடைய சான்றோரையும், கழற - இடித்துரைக்க, நோக்குமே - நோக்குவிக்கும், (எ - று.) ஆய்விடினும் - என்னும் உம்மை செய்யுள் விகாரத்தாற் கெட்டது. இதனால் ஒருவன்பால் பொருள் நிலைத்து நின்ற வழியும் அதனால் ஏற்படும் தீமை கூறப்பட்டது. | |
| (பாடம்) 1 உற்றுநின் றொருவர்கண். | | |
|
|