பக்கம் : 1287
 
 
  பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல்
பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே.
 
     (இ - ள்.) அருமுடி துறந்தனன் அரசன் - பெறலரும் முடியணியைப் பயாபதி
வேந்தன் அகற்றினனாக, ஆயிடை - அப்பொழுது, திருமுடி - அழகிய முடிக்கலன்மிசை,
மணித்துணர் தேவர் - அழகிய கற்பகப் பூக்கொத்தைச் சூடியுள்ள அமரர்களால், பருமுடி
கொண்டுபோய் - அப் பரிய முடியினை ஏந்திச் சென்று, நீரை அன பரவைப் பாற்கடல் -
வரிசையாக அன்னங்கள் நீந்துதலையுடைய அகன்ற பாற்கடலின் நாப்பண், பெருமுடி
அமைகென - பெரிய முடியே நீ இதன்கண் அமைவாயாக என்று கூறி, பெய்யப்பட்டதே -
விடப்பட்டது, (எ - று.)

     பெருமுடி : விளி வேற்றுமை. முடியைப் பெறாதவழிப் பெறுதலும். பெற்ற வழி அதை
இழக்கத் துணிதலும் மிக அரிதாகலின் - அருமுடி யென்றார். முடியைப் பாற்கடலில்
பெய்தனர் தேவர்கள் என்றது. அம்முடியின் அருமை, தெய்வத்தன்மை முதலியவற்றை விளக்கி நிற்றல் காண்க.
 

( 30 )

வேறு அரசர் ஆயிரவர் துறத்தல்

2099. முரைசதிர் முழங்கொலி மூரித் தானையும்
திரைசெறி வளாகமுஞ் சிறுவர்க் கீந்துபோய்
அரைசரு மாயிர ரரைசர் கோனொடு
விரைசெறி மணிமுடி 1விலங்க நீக்கினார்.
 

     (இ - ள்.) முரைசு அதிர்முழங்கு ஒலி மூரித் தானையும் - முரசங்கள் அதிர்ந்து
முழங்கு தலாலாகிய ஒலியையுடைய பெரிய படைகளையும், திரைசெறி வளாகமும் - கடல்
சூழ்ந்த நிலத்தையும், சிறுவர்க்கு ஈந்து போய் - தத்தம் மகாருக்கு வழங்கி விட்டுச் சென்று,
அரசரும் - ஏனைய மன்னர்களும் ஆயிரர் - ஓராயிரவர், அரைசர் கோனொடு - பயாபதி
வேந்தனோடே, விரைசெறி மணிமுடி - மலர் நிறைந்த மணிகள் அழுத்திய தத்தம்
முடிக்கலன்களை, விலங்க நீக்கினார் - அகலத் துறந்தனர், (எ - று.)

     விலங்க நீக்கினார் என்றது, புறத்தே நீக்குதன் மாத்திரையின்றி அகத்தேயும் பற்றறத்
துறந்தனர் என்பதாம். அரைசரும் - என்றதன் கண் உம்மை, இறந்தது தழீஇச் சிறப்பும்
குறித்து நின்றது.
 

( 31 )

 
2100. முடிகளுங் கடகமு முத்தி னாரமும்
சுடர்விடு குழைகளுந் துளும்பு பூண்களும்
 

 


     (பாடம்) 1 விளங்க நீக்கினார்.