பக்கம் : 129
 
     (இ - ள்.) அம்சுடர் முருக்கின் - அழகிய தளிர்களையுடைய பலாச மரத்தினது; அம்
கேழ் அணிமலர் - அழகிய நிறத்தையுடைய சிறந்த மலர்கள்; கொம்பர் - மரக்கிளைகளில்;
அணிந்து - வரிசை வரிசையாகத் தோன்றி; துஞ்சு இடை பெறாது தும்பி துவன்றி
மேல்துகைக்கும் - தங்குதற்கு இடம் பெறாமையால் வண்டுகள் நிறைந்து மேலே தங்
கால்களால் துகைக்கப் பெறுகின்ற; தோற்றம் - காட்சியானது; செம்சுடர் இலங்கும் செந்தீ -
செவ் வொளி விளங்கும் நெருப்பானது; கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி - கருநிறமுள்ள
கரிகளைச் சிதறிக் கொண்டு; மஞ்சு உடை மயங்கு கானம் மண்டிய - உயர்ச்சியால்
முகில்களைச் சிதறச்செய்கின்ற அடர்ந்த காட்டினிடத்திலே பற்றிய - வகையிற்று -
தன்மையைப் போன்றது. (எ - று.) அன்றே: ஈற்றசை.

     செந்நிறம் உள்ள பலாச மலர்கள் அம்மரத்தின் கிளைகள் நிறையப் பூத்து மேலே
வண்டுகள் மிகுதியாக மொய்க்கப்பெறுகின்ற தோற்றமானது, சிவந்த நெருப்பு, காட்டில்பற்றிக்
கரிகளைச் சிதறினாற் போன்றதென்பதாம். பலாசமலர்க்குத் தீயும் வண்டுக்குக் கரியும்
வண்ணத்தில் ஒப்பு. இதனை வண்ண உவமம் என்பர். கந்துள் - கரி.
 

( 46 )

வண்டுகள் மயக்கமுந் தெளிவும்

165. அந்தழை யசோகம் பூத்த வழகுகண் 1டவாவி னோக்கி
வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்
செந்தழற் 2பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே.
 

     (இ - ள்.) அம்தழை அசோகம் பூத்த அழகு கண்டு - அழகிய இலைகளையுடைய
அசோகமரம் மலர்ந்த அழகிய தோற்றத்தைக் கண்டு; அவாவின்நோக்கி் - மொய்த்தற்காக
விருப்பத்துடன் பார்த்து நெருங்கிவந்து; வெந்தழல் பிறங்கல் என்று வெருவிய - கொடிய
எரிமலையென்று அஞ்சிய; மறுவில் தும்பி - குற்றமற்ற வண்டுகள்; கொந்து அவிழ்ந்து
உமிழப்பட்ட குளிர்மதுத் திவலை தூவ - அப்பூங்கொத்துக்கள் இதழ்முறுக்கு விரிதலால்
சொரியப்பெற்ற குளிர்ச்சியான தேன்துளிகளைச் சிந்துதலானே; செந்தழல் பிறங்கல் அன்மை தெளிந்து -

 


     (பாடம்) 1. ஆவினோக்கி. 2. பிறங்கலென்மை.