செல்வம் எல்லாவற்றுள்ளும் சிறந்த மெய்யுணர்ச்சியாகிய செல்வம் உடையவன் ஆதலின் பயாபதி மன்னனைத் திருவுடை அடிகள் என்று விசயதிவிட்டர்கள் போற்றினர் என்க. |
( 39 ) |
வேற்படை பயாபதியை வணங்கி மீள்தல் |
2108. | பாற்படு செல்வமும் பரவை ஞாலமும் காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால் ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே. |
(இ - ள்.) பால் படு செல்வமும் - பலபகுதிப் படுகின்ற செல்வங்களையும், பரவை ஞாலமும் - விரிந்த உலகத்தையும், காற் பொடி யாகவும் கருதிற்று இன்மையால் - தன் காலின்கட் கதுவிய துகட்டுணையும் பொருளாக மதித்தல் இல்லாமையினாலே, ஈண்டு நம் மடிமை ஏற்புடைத்து அன்று - இவ்விடத்தே நமது அடிமைத் தொழிலும் மன்னனால் ஏற்கும் தகுதியுடையதன்று, என - என்று கருதி, வேற்படை - வேற்படையும், வீரனைத் தொழுது மீண்டது ஏ - பயாபதி மன்னனை வணங்கிப் போயிற்று, (எ - று.) வேற்படை - பயாபதிக்கு அதுகாறும் ஏவல் செய்துவந்த வொருவேல். வேலேந்திய படைஞர் எனினுமாம். மெய்யுணர்வுடைய துறவிப் பெரியோர் தம் உடலையும் மிகை என்று எண்ணும் இயல்புடையர்; பிற பொருள்களை அவர் பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்ளார். ஆகலின், பயாபதி வேந்தனுடைய தெய்வத் தன்மையுடைய வேல் இனி யாம் அரசற்கு மிகை என்று எண்ணி வணங்கிப் போய்விட்டது என்பதாம். |
( 40 ) |
பயாபதியின் தவநிலை வேறு |
2109. | வேற்படை விடுத்து வீரத் 1தவ்வர சதனை மேவி நூற்படை முனிவர் கண்ணா னோக்கிய நயத்த னாகிப் பாற்படு விரத நோன்மைப் படைப்பெருந் தலைவ ரைவர் மேற்படை செய்யச் செல்லும் வினைவரை விலக்க வைத்தான். |
|
|
|
(பாடம்) 1அடிகுறிப்பு தரபடவில்லை. |