பக்கம் : 1292
 

     செல்வம் எல்லாவற்றுள்ளும் சிறந்த மெய்யுணர்ச்சியாகிய செல்வம் உடையவன்
ஆதலின் பயாபதி மன்னனைத் திருவுடை அடிகள் என்று விசயதிவிட்டர்கள்
போற்றினர் என்க.
 

( 39 )
வேற்படை பயாபதியை வணங்கி மீள்தல்
2108. பாற்படு செல்வமும் பரவை ஞாலமும்
காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால்
ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென
வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே.
 
     (இ - ள்.) பால் படு செல்வமும் - பலபகுதிப் படுகின்ற செல்வங்களையும், பரவை
ஞாலமும் - விரிந்த உலகத்தையும், காற் பொடி யாகவும் கருதிற்று இன்மையால் - தன்
காலின்கட் கதுவிய துகட்டுணையும் பொருளாக மதித்தல் இல்லாமையினாலே, ஈண்டு நம்
மடிமை ஏற்புடைத்து அன்று - இவ்விடத்தே நமது அடிமைத் தொழிலும் மன்னனால் ஏற்கும்
தகுதியுடையதன்று, என - என்று கருதி, வேற்படை - வேற்படையும், வீரனைத் தொழுது
மீண்டது ஏ - பயாபதி மன்னனை வணங்கிப் போயிற்று, (எ - று.)
வேற்படை - பயாபதிக்கு அதுகாறும் ஏவல் செய்துவந்த வொருவேல். வேலேந்திய படைஞர்
எனினுமாம்.

     மெய்யுணர்வுடைய துறவிப் பெரியோர் தம் உடலையும் மிகை என்று எண்ணும்
இயல்புடையர்; பிற பொருள்களை அவர் பொருளாகக் கருதி ஏற்றுக்கொள்ளார். ஆகலின்,
பயாபதி வேந்தனுடைய தெய்வத் தன்மையுடைய வேல் இனி யாம் அரசற்கு மிகை என்று
எண்ணி வணங்கிப் போய்விட்டது என்பதாம்.
 

( 40 )

பயாபதியின் தவநிலை
வேறு
2109. வேற்படை விடுத்து வீரத்
     1தவ்வர சதனை மேவி
நூற்படை முனிவர் கண்ணா
     னோக்கிய நயத்த னாகிப்
பாற்படு விரத நோன்மைப்
     படைப்பெருந் தலைவ ரைவர்
மேற்படை செய்யச் செல்லும்
     வினைவரை விலக்க வைத்தான்.
 
 

     (பாடம்) 1அடிகுறிப்பு தரபடவில்லை.