பக்கம் : 1295 | | | 2112. | படைகெழு புரிசை வெல்வார் புறநின்று பதின்மர் காக்க விடையவர் தம்மு ளாரே யுழையரீ ரறுவ ராக உடையதன் னுலக மூன்று மொருவழிப் படுக்க லுற்று மிடைகெழு வினைவர் தானை மெலியமேற் சென்றுவிட்டான். | (இ - ள்.) படைகெழு புரிசை வெல்வார் - படைகள் செறிந்த மதில்களையுடைய பகைவரை வெல்லும் ஆற்றலுடைய, பதின்மர் புறம் நின்று காக்க - உத்தமக்ஷமை முதலிய பத்து அறவீரரும் வெளிப்புறத்தே நின்று காவல் செய்யவும், விடையவர் - காளைபோல்வர், தம் உளார் உழையர் ஈர் அறுவர் காக்க - தம்முள்ளேயே உள்ளிடத்தாரும் வெளியிடத்தாருமாய் இருவகைப்பட்ட தவம் என்னும் பன்னிருவரும் துணையாக, உடைய தன் உலகம் மூன்றும் ஒருவழிப்படுக்கலுற்று - தனக்கு உரியதாய் மூன்றுவகை வேற்றுமையுடைய உலகங்கள் அனைத்தையும் ஒன்றுபடச் செய்யும் பொருட்டு, மிடைகெழு வினைவர் தானை - மிக்குச் செறிந்த வினைப்பகைவர்களின் படை, மெலிய - மெலியுமாறு, மேற்சென்று விட்டான் - தவப்போர் மேற்கொண்டான், (எ - று.) உத்தமக்ஷமை, உத்தமார்த்தவம், உத்தம ஆர்ஜவம், உத்தம சத்தியம், உத்தம சௌசம், உத்தம சம்யமம், உத்தம தவம், உத்தம தியாகம், உத்தம ஆகிஞ்ஜின்யம், உத்தம பிரமசரியம் என்னும் பத்து அறங்களும் காவலாக அமைய என்றபடி. | ( 44 ) | | 2113. | பின்னணி யோகு நான்மை யபரகாத் 1திரம்பேற் றேனைத் தன்னவ யவங்கண் முற்றித் தயங்குநூன் மனங்க ளோவா துன்னிய திசையி னுய்க்கு முணர்வெனும் வயிரத் தோட்டி இன்னியன் ஞான வேழத் தெழிலெருத் தேறி னானே. | (இ - ள்.) பின் அணி - நால்வகைத் தியானங்களின் ஈற்றினின்ற அழகிய, யோகு நான்மை அபரகாத்திரம் பெற்று - (பிருதக்துவ விதர்க்கவிசாரம், ஏகத்துவ விதர்க்க விசாரம், சூக்குமக் கிரியாபிரவிருத்தி, வியூபரதகிரியா நிவிருத்தி எனும்) சுக்லத் தியானத்தின் கூறுபாடுகளின் கூட்டமாகிய நான்கு கால்களையுடையதாய், ஏனைத் தன் அவயவங்கள்முற்றி - எஞ்சிய தன் உறுப்புக்களும் இலக்கணமுடையவாய் அமைந்த, இன் இயல் ஞானவேழத்து - இனிய இயல்பமைந்த அறிவாகிய களிற்றினது, எழில் எருத்து - அழகிய பிடரின்கண், தயங்கு நூல் - திகழ்கின்ற மெய்ந்நூல்களால் உருப்பெற்றதும், மனங்கள் - பொறிகளை, ஓவாது - ஒழியாமல், உன்னிய திசையின் உய்க்கும் - நினைத்த நெறியிலே செலுத்துவதும் ஆகிய, உணர்வெனும் வயிரத் தோட்டி - மெய்யுணர்ச்சி என்னும் திண்ணிய அங்குசத்தோடே, ஏறினான் ஏ - ஏறி யமர்ந்தான், (எ - று.) | |
| (பாடம்) 1 திரத்தோ டேனை. | | |
|
|