பக்கம் : 1296 | | யோகு - கூட்டம், அபரகாத்திரம் - கால்கள். மனங்கள் - ஈண்டுப் பொறிகட்கு ஆகுபெயர். சுக்கிலத்தியானத்தின் நான்கு கூறுகளையும் கால்களாய்க்கொண்டு நடக்கும் மெய்யறிவாகிய யானையில் ஏறினான் என்க. யோகு - பரமாகமத்தின் பிரிவுகளாகிய பிரதமாநுயோகம் முதலிய நான்கும் எனினுமாம். தயங்கு நூல்களால் உறுதிபெற்ற உணர்வெனும் வயிரத் தோட்டி என்று இயைக்க. | ( 45 ) | | 2114. | தருக் 1கெயில் காப்பு வாங்கத் தடக்கைமால் பகடு நுந்தித் திருக்கிளர் 2குணமேற் சேடிச் செழுமலைக் குவட்டி னோட்டி முருக்கிய வுருவு வேட்கை முனைப்புல மகற்றி முற்றிச் செருக்கிய வினைவர் வாழுந் திண்குறும் பழிக்க லுற்றான். | (இ - ள்.) தருக்கு எயில்காப்பு வாங்க - வினைப்பகைவருடைய யான் எனது என்னும் செருக்குகளாகிய மதிலரணை அழித்தற் பொருட்டு, தடக்கைமால் பகடுநுந்தி - வலிய கையையுடைய பெரிய யானையைக் கடாவி, திருக்கிளர் குணமேற்சேடி - நன்மை மிக்க குணம் என்னும் வித்தியாதரர் உலகத்திலே அமைந்த, செழுமலைக் குவட்டின் ஓட்டி - செழித்த மலையினது உச்சியிலே செலுத்தி, முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி - முருகி வளர்ந்த விழைவே உருவமாகிய போர் முனைக்கண்ணே பகைவர் வாராதபடி ஒழித்து, முற்றி - பகைவர் கோட்டையை வளைந்துகொண்டு, செருக்கிய வினைவர் வாழும் - செருக்குடைய வினைப்பகைவர் வாழிடமான, திண் குறும்பு அழிக்கலுற்றான் - திண்ணிய அக அரண்களையும் அழிக்கலானான், (எ - று.) தவம் இயற்றுதற்குரிய நற்குணங்களை ஈண்டு வித்தியாதரர் உலகத் தோடு உவமித்தார் திண் குறும்பு - வலிய காவற்காடு, அதாவது மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பேர்பெற்ற ஐ வாய வேட்கை அவா. | ( 46 ) | | 2115. | நிறையிலார் பொறுத்த லாற்றா நிலையிது நிறைந்த நோன்மைக் கறையிலீ ராறுக் கொத்த 3கண்ணியர் கவரி 4வீச | | | | (பாடம்) 1 தருக்கறல் காப்ப. 2 குணங்கள். 3 கண்ணிவர். 4 வீசி. | | |
|
|