பக்கம் : 1297 | | | | முறையினாற் பெருகு முள்ளச் சமாதிநீர் முறுக வுண்ட குறைவிலாத் தியான மென்னுங் கொற்றவா ளுருவிக் கொண்டான். | (இ - ள்.) நிறையிலார் - மூவகை அடக்கமும் இலாதார், பொறுத்தல் ஆற்றா நிலையிது - தாங்குதல் இயலாத இவ்வுயரிய நிலையின்கண் நின்று, நிறைந்த நோன்மை - பெருகிய ஆற்றலுண்மையால், கறையில் ஈர் ஆறுக் கொத்த கண்ணியர் - குற்றமற்ற பன்னிருவராகிய மாலையினையுடையார், கவரிவீச - சாமரையிரட்டாநிற்ப, முறையினாற் பெருகும் உள்ளச் சமாதி நீர் முறுக உண்ட - படிப்படியாக மிகாநின்ற மெய்யுணர்ச்சி யென்னும் அமிழ்தநீரை மிக்குண்ட, குறைவிலாத் தியானம் என்னும் - குற்றமற்ற தியானம் என்று கூறப்படும், கொற்றவாள் உருவிக் கொண்டான் - வெற்றிக்குக் காரணமான வாளை உறை கழித்துக் கைக்கொண்டான், (எ - று.) பன்னிருவர் - துவாதாசாநுப் பிரேக்ஷைகள். தரும சுக்கிலத் தியானப் பயிற்சியே நாளடைவில் உயிரின் குற்றங்களைக் தேய்த் தொழித்தற்குரிய கருவியாதலின் “தியான வாள்“ என்றார். அநுப்பிரேக்ஷைகள் பன்னிரண்டும் கவரியிரட்டும் மகளிராக உருவகிக்கப்பட்டன. | ( 47 ) | | 2116. | விண்கடாஞ் செய்யும் வெய்ய வினைவர்கட் கரண மாகிக் கண்கடா மறைக்கு மோரேழ் கடிவினை பொடிசெய் திட்டே 1எண்கடா நவின்ற வீரெண் கொடிமதிற் கோட்டை கட்டி எண்கடா முடைய வெண்மர் குறும்பரை யெறிந்து வீழ்ந்தார் | (இ - ள்.) விண்கள் தாம் செய்யும் வெய்ய - வீண்செயல்களையே செய்யாநின்ற கொடிய, வினைவர்கட்கு - இருவினைப் பகைவர்கட்கு, அரணமாகி - காவலாகப் பொருந்தி, கண்கடாம் மறைக்கும் - ஞானக்கண்களை மறையாநின்ற, ஓர் ஏழ் கடிவினை பொடி செய்திட்டு - ஓர் ஏழாகிய கொடிய தரிசனமோகநீயம் என்னும் வினைகளைச் சுட்டுத் துகள் செய்து, எண்கள் தாம் நவின்ற - எண்ணிக் கூறப்பட்ட, ஈர் எண்கொடிமதில் கோட்டை கட்டி - சோடச கர்மமென்கிற கொடியையும் மதிலையும் உடைய வலிய கோட்டையைக் கட்டிக்கொண்டு, எண்கள்தாம் உடைய எண்மர் குறும்பரை யெறிந்து வீழ்த்தார் - ஆராய்தற்கு உரிய பிரத்யாப்பிரத்தி யாக்யானம் என்னும் எட்டுக் கயவர்களையும் கொன்று தள்ளினான், (எ - று.) | |
| (பாடம்) 1 கொண்கடா. | | |
|
|