பக்கம் : 1299 | | (இ - ள்.) பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் - மீண்டும் ஒரு நான்கு பகைவர்கள், முறை முறை பிணங்கி வீழ்ந்தார் - ஒருவர் பின் ஒருவராய்த் தன்னோடு மாறாகிப் போர்செய்து மாண்டனர், அன்னவர் தம்முளானே - அந்நால்வருள் ஒருவனே, குறைப்பிணம் ஒருவனாகி - உயிர் முழுதும் ஒழியாத ஒரு குறைப்பிணமாய்க் கிடந்து, தன்னை மெய்பதைப்ப - தன்னை உடல் சினத்தாற் றுடிக்கும்படி, நோக்கி - நோக்க, அவனையும் - அம் மறவனையும், தபுப்ப - கொன்றொழிக்க, நோனார் - பகைவராகிய, துன்னிய துயிலும் - நெருங்கிய நித்திரையும், ஏனை - மற்றைப் பிரசலையும் ஆகிய, இருவர் - இருவரும், துளக்கம் செய்து - தன்னைக் கலங்கப் போர்செய்து, பட்டார் - முடிவில் இறந்தொழிந்தார், (எ - று.) ஒரு நால்வர் - மெல்லிய கஷாயம் என்னும் சஞ்சுவலனகுரோதம் மானம் மாயம் லோபம் என்பன. இருவர்:- நித்திரை பிரசலை என்பன. அன்னவர் தம்முளானே குறைப் பிணம் ஒருவன் என்றது சஞ்சுவலன லோப கஷாயகர்மத்தை, இஃது ஒன்றை மட்டும் “மகா சூக்ஷநிமமாய், பிரக்ஷாளனம் பண்ணின வஸ்திரத்தில் தோய்ந்த குசும்பம்போல சூக்ஷ்மமாக வர்த்தித்து ஏனைய மோகனீய மனைத்தையும் விடவேண்டுமாகலின், அங்ஙனம் கூறினார் என்க. | ( 50 ) | | 2119. | ஆங்கவ ரழிந்த பின்னை யரசரை யிருவ ரோடும் தாங்கியீ ரிருவர் தாக்கித் தலைதுணிப் புண்ட பின்னை வீங்கிய வனந்த ஞான்மை விழுநிதி முழுதுங் கைக்கொண் டோங்கிய வுலகிற் கெல்லா மொருபெருங் கிழவ னானான். | (இ - ள்.) ஆங்கு அவரழிந்த பின்னை - அவ்வாறு அப்பகைவர்கள் பட்டொழிந்த பின்னர், அரசர் ஐயிருவரோடும் தாங்கியீர் இருவர் தாக்கி - சுவை முதலிய ஐந்து மன்னரும், வெண்மை முதலிய ஐந்து மன்னரும் ஆகிய பதின்மருடன், சேர்ந்து, ஞானாவரணீயம் முதலிய நான்கு பகைவர்களும், தன்னோடு போர்செய்து, தலைதுணிப்புண்ட பின்னை - தலையறு பட்டிறந்து ஒழிந்த பின்னர், வீங்கிய - பெருகிய, அனந்த ஞான்மை விழுநிதி முழுதும் கைக்கொண்டு - கடையிலா நான்குவகைப்பட அநந்த சதுஷ்டயமாகிய சிறந்த பொருள் முழுதும் தனதேயாய்க் கைக்கொண்டு, ஓங்கிய வுலகிற்கு எல்லாம் - உயர்ந்த வீட்டுலகம் முழுமைக்கும், ஒரு பெருங்கிழவன் ஆனான் - ஒப்பற்ற பெரிய உரிமையாளனாய்த் திகழ்ந்தான் பயாபதிமுனிவன், (எ - று.) அரசர் ஈரைவர், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமும், வெண்மை பொன்மை பசுமை செம்மை கருமை ஆகிய பத்துமாம். நால்வர் - ஞானாவரணீயம், அந்தராயம் தரிசனாவரணீயம் மோகனீயம், என்பன. ஞான்மை - நான்மை : ஞகரம் நகரப்போலி | | |
|
|