பக்கம் : 1301 | | செயற்கரிய செயலாகிய பொறியடக்கல் முதலியவற்றைச் செய்து வெல்லுதலே பேராண்மை யாகலின் அவ்வாறு பொறிகளை வென்றுயர்ந்த துறவிகளை இந்திரன் முதலியோர் வணங்குதல் மரபு என்க. | ( 53 ) | இதுவுமது | 2122. | பொன்னரி மாலை பூவின் பொழிமதுப் பிணையன் முத்தின் 1மின்னிவர் விளங்குந் தாம மெனவிவை விரவி வீசித் துன்னிய வினைவர் கூட்டந் துணித்துவீற் றிருந்த கோனைப் பன்னிய துதிய ராகி யமரர்கள் பரவு கின்றார். | (இ - ள்.) பொன்னரி மாலை - பொன்னாலியன்ற அரிமாலையென்னும் அணியும், பூவின் பொழிமதுப் பிணையல் - பூவானியன்ற தேன்துளிக்கும் மாலையும், முத்தின் மின் இவர் விளங்கும் தாமம் - முத்தானியன்ற ஒளி தவழ்ந்து திகழும் மாலையும், என இவை விரவி வீசி - என்னும் இம்மாலைகளை விசும்பிற் கலக்க வீசினராய், துன்னிய வினைவர் கூட்டம் - நெருங்கிய வினைப் பகைவரையும் அவர்க்கினமாய கூட்டத்தாரையும், துணித்து - கொன்றழித்து, வீற்றிருந்த கோனை - வாகை சூடி வீற்றிருந்த துறவியர் வேந்தனாகிய பயாபதியை, அமரர்கள் - தேவர்கள், பன்னிய துதியராகி - பலபடப் பாராட்டிய வாழ்த்துடையராய், பரவுகின்றார் - புகழ்வாராயினர், (எ - று.) நல்வினையாதல், தீவினையாதல் செய்தற்குக் காரணம் அவாவே ஆகும். அவ்வவாவுடையார்க்குச் சினம் முதலிய எல்லாக் குற்றங்களும் உளவாம். ஆதலின் இவ்வழுக்குகளை வினைவர் கூட்டம் என்று கூறினர் என்க. | ( 54 ) | தேவர்கள் பயாபதி முனிவனைப் புகழ்ந்து பாடுதல் வேறு | 2123. | கருமால் வினையரசு காறளர நூறிப் பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும் வருமா றிலாத வளநகரம் புக்கானே. | இது முதல் மூன்று செய்யுள் ஒரு பொருள் மேலடுக்கி வந்தன. | | | (பாடம்) 1 மின்னவா. | | |
|
|