பக்கம் : 1305 | | (இ - ள்.) அருமால் வினை அகல - கடத்தற்கரிய மயக்கத்தைப் பற்றி வருகின்ற இருவினைத் தொடர்பு அகன்றொழியவும், அமரர் நாளும் அடிபரவ - தேவர்கள் நாடோறும் தன் திருவடிகளை வாழ்த்தவும், பெருமான் பிரசாபதி - பெரியோனாகிய பயாபதி அடிகள், பிரமலோகம் இனிது ஆள - வீட்டுலகத்தை இனிதாக ஆட்சி செய்யாநிற்ப, திருமால் - திருமாலாகிய திவிட்டமன்னன், பெருநேமி திகழ்ந்த - பெரிய ஆழிப்படை விளங்காநின்ற, செந்தாமரைத் தடக்கை - செந்தாமரை மலர் போன்ற தன் பெரிய கைகளாலே, கருமால் கடல் வரைத்த - கரிய பெரிய கடலை எல்லையாக உடைய, கண்ணார் ஞாலம் - இடம் அகன்ற இவ்வுலகங்களை, காக்கின்றான் - இனிதே ஓம்பா நின்றான், (எ - று.) பயாபதி மன்னன் வீட்டுலகினையும் அவன் மகன் மண்ணுலகினையும் ஒருங்கே ஆட்சி செய்தனர் என்றபடி. கடல் வரைத்த - கடல்களை எல்லையாகவுடைய, எனவே உலகமுழுதும் என்றபடி. | ( 60 ) | திவிட்டன் உலகாள்தற் சிறப்பு | 2129. | தங்கோ னமருலக 1மினிதி னாளத் தரங்கநீர்ப் பொங்கோ 2தம துடுத்த பூமி யெல்லாம் பொதுநீக்கிச் செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும் 3அங்கோல் வேலரச ரடிபா ராட்ட 4வாள்கின்றான். | (இ - ள்.) தங்கோன் அமருலகம் இனிது ஆள - தம் தலைவனாகிய பயாபதி வீட்டுலகத்தை இனிதாக ஆளாநிற்ப, தரங்கம் நீர் பொங்கு ஓதமது உடுத்த பூமி எல்லாம் - அலைகளையுடைய நீர் பொங்குகின்ற முழக்கமுடைய கடலை ஆடையாக உடுத்துள்ள நிலவலயம் முழுதையும், பொது நீக்கி - பலருக்கும் பொது என்னும் மொழி நிகழாதவாறு அகற்றித் தனக்கே உரிமையாக்கி, செங்கோல் இனிது ஓச்சி - செங்கோன்மை பிறழாதபடி முறை செய்து உயிர்கள் இன்புறும்படி அரசு செலுத்தி, தேவர்காப்ப - தன்னைத் தெய்வங்கள் பாதுகாவா நிற்ப, திருமாலும் - திவிட்டமன்னனும், அங்கோல் வேல் அரசர் அடி பாராட்ட - அழகிய செங்கோன்மையும் வேலும் உடைய மன்னர்கள் தனது திருவடியைப் புகழ்ந்து வாழ்த்தா நிற்ப, ஆள்கின்றான்-ஆட்சி செய்யா நின்றான், (எ - று.) பொது நீக்குதல் - இம்மண்ணுலகம் பல அரசற்கும் பொதுவானது என்னும் சொல்லை அகற்றுதல். ஒரே குடையின்கீழ்த் தனக்கு உரிமையாக இம்மண்ணுலகம் முழுதையும் ஆட்சி செய்தான் என்பது கருத்து. | |
| (பாடம்) 1 மினிது மாளத். 2 ம்புடையுடுத்த. 3 அங்கோல. 4 வாழ்கின்றான். | | |
|
|