பக்கம் : 132
 

அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் என்னும்
பூம்பொழிலை யடைதல்

168.

வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு
முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடுங்
கயந்தலைக் களிறுந் தேரும் வையமுங் கவின வேறி
நயந்தன னகரி னீங்கி மனோவன நண்ணி னானே.
 

     (இ - ள்.) மன்னவன் - சுவலனசடி யரசன்; வயந்தம் ஆங்கு உணர்த்தக் கேட்டு -
வேனிற் காலத்தின் வரவை அவ்வாறு வயந்ததிலகை கூறக்கேட்டு; நயந்தனன் -
பூம்பொழில் செல்வதற்கு விரும்பினான்; மக்களோடும் - தன் மகனாகிய அருக்ககீர்த்தி
மகளாகிய சுயம்பிரபை ஆகியவர்களுடன்; உயர்ந்த தன் உரிமையோடும் -
சிறப்பினையுடைய தன் உரிமைப் பெண்களுடனும்; உரிமைகாப்பவர்களோடும் -
அவ்வுரிமைப் பெண்களுக்குப் பாதுகாப்பாகவுள்ள மெய்காவலர்களோடும்; கயந்தலை -
யானைக் கன்று களின்மீதும்; களிறும் - ஆண்யானையின்மீதும்; தேரும் - தேரின்மீதும்;
வையமும் - பல்லக்கின் மீதும்; கவினஏறி - அழகுண்டாக ஏறி; நகரின் நீங்கி - இரதநூபுர
நகரத்தைவிட்டு அகன்று; மனோவனம் நண்ணினான் - நகர்ப் புறத்திலிருந்த மனோவனம்
என்னும் பொழிலையடைந்தான். (எ - று.)

     வேனிற் பருவத்தின் வருகையை வயந்ததிலகையால் உணர்ந்த மன்னன். தன்
உறவினர்களுடன் மனோவனம் என்னும் பொழிலை அடைந்தனன் என்க. சுவலனசடி
சென்ற மனோவனத்தை ‘மநோகரம்‘ என்று ஸ்ரீபுராணம் கூறுகின்றது.
 

( 50 )

வேறு
அரசனைப் பொழில் வரவேற்றல்
169. கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்
தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே
வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே.
 

     (இ - ள்.) கோமான் சென்று அணைதலுமே - சுவலனசடி யரசன் அப்பொழிலைச்
சென்று சேர்ந்த அளவிலே; அச்சோலையில்