உள்ள; தேமா - தேமாமரங்கள்: கொங்கு அணிந்த மலர் தூவி நின்று எதிர்கொள்ள - மணம் பொருந்திய மலர்களைத் தூவிநின்று அரசனை வரவேற்க; சிறுகுயில் போற்று இசைத்தன - சிறிய வடிவமுடைய குயில்கள் அரசனுக்கு வாழ்த்துக் கூறின; வாம் மான் தேர் மன்னற்கு - தாவிப்பாய்ந்து ஓடுகின்ற குதிரைகளைப் பூட்டிய தேரையுடைய அரசனுக்கு; மங்கலஞ் சொல் மகளிரைப்போல் - மங்கல வாழ்த்துப் பாடல் பாடுகின்ற பெண்களைப்போல; தூ மாண்ட இளங்கொடி - தூய்மையிற் சிறந்த இளமைமிக்க பூங்கொடிகள்; தம் தளிர்க்கையால் தொழுதன - தம்முடைய தளிர்களாகிய கைகளால் வணக்கஞ் செய்தன. (எ - று.) அரசன் சென்று பொழிலைச் சேரும்போது கால நிலைமைக்கு ஏற்பப் பொழில்களில் மாமரங்கள் மணம் பொருந்திய மலர்களைச் சொரிதலை, அவ்வரசனை மலர்தூவி வரவேற்பதாகவும், சிறு குயில்கள் கூவுதலை அவ்வரசனுக்கு வாழ்த்துக் கூறுவதாகவும், இளங்கொடிகள் குவிந்த தளிர்களைக் கொண்டிருத்தலை அவ்வரசனுக்கு மங்கல வாழ்த்துப் பாடல் பாடும் மாதர்கள் கைகூப்புவதாகவும் கற்பித்தார். கொடிகள், மெல்லியவாய் ஒல்கி யொசியும் வடிவினால் மகளிரைப் போலும். கொடிகளில் வண்டுகள் ஒலித்தலை வாழ்த்தொலியாகக் கொள்க. கோமான் - மான் பெயர் விகுதி. தேமா - இனிமையான (தேன் போன்ற) பழங்களைக்கொண்ட மாமரம். |
( 51 ) |
மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடைபிடித்தல் |
170. | கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு வடிவாசப் பொடியாக 1வனவல்லி சொரிந்தனவே புடைவாசங் கொள 2மாலம் பூங்கவரி யெடுத்தெறியக் 3குடைமாக மெனவேந்திக் 4கோங்கம்போ தவிழ்ந்தனவே. |
(இ - ள்.) வனவல்லி - அந்தப் பூம்பொழிலில் உள்ள பூங்கொடிகள்; கடிவாசம் மலர்விண்ட கமழ்தாது - புதுமையான மணத்தினையுடைய மலர்களினின்றும் வெளிப்படுகின்ற மணம் வீசும் மகரந்தப் பொடிகளை; கழல் அவற்கு - மறக்கழலை யணிந்த சுவலனசடி மன்னனுக்கு; வடிவாசப் பொடியாகச் சொரிந்தன - சிறந்த மணப்பொடியாக இறைத்தலைச் செய்தன; |
|
|
(பாடம்) 1. வனமல்லி. 2. மரவம் பூங்கவரி. 3. குடையாக.4. கோங்கப் போ. |