பக்கம் : 142
 
     (இ - ள்.) மெய் மயிர் எறிந்து - சுவலனசடியரசனானவன் உடம்பில் மயிர்
சிலிர்க்கப்பெற்று, ஒளிதுளும்பும் மேனியன் - ஒளிவிளங்கும் உடலையு டையவனாய்; கை
முகிழ் முடித்தடம் கதழச் சேர்த்தினான் - தாமரை யரும்பு போன்ற குவிந்த தனது
கைகளைத் தன் தலைமீது விரைவாகக் குவித்து; வெம்மை செய் வினைத்துகள்
விளியவென்றவன் - தீமையைச் செய்கின்ற இருவினைத் தூள்கள் பறந்தோடிக் கெடுமாறு
வென்றவனான அருகக் கடவுளது; செம்மலர்த் திருந்தடி - செந்தாமரை மலர் போன்ற
அழகிய அடிகளை; சீரின் ஏத்தினான் - சிறப்பாகப் போற்றினான். (எ - று.)

     உடம்பில் மயிர்க்கூச் செறிதலும், உடம்பின் இயற்கையொளி மிகுதலும்
அன்பினாலாகும் மெய்ப்பாடுகள். குவித்த கைகளை விரைவாகத் தலைமீது கொண்டான்
என்பது இரண்டாம் அடிக்குப் பொருள்.
 

( 63 )

வேறு
வரிப்பாட்டு

எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்

182. அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே.
 

     (இ - ள்.) அணியாதும் - யாதோர் அணிகலனையும் அணிந்துகொள்ளாமலிருந்தும்;
ஒளிதிகழும் - இயற்கையொளி விளங்கப்பெறும்; அணங்கு ஆர் திருமூர்த்தி - அழகு
நிறைந்த சிறந்த வடிவத்தை யுடையவனே!; கணியாது முழுதுணர்ந்த கடவுள் என்று
அறையும் - இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்த கடவுள் என்று நூல்கள்
உன்னைக்கூறா நிற்கும்; கணியாது முழுது உணர்ந்த கடவுள் என்று அறைந்தாலும் -
அவ்வாறு இயல்பாகவே எல்லாவற்றையும் அறிந்த கடவுள் என்று நூல்கள் உன்னைக்
கூறினாலும்; அணிஞாலம் உடையாயை - அழகிய உலகங்கள் எல்லாவற்றையும்
உரிமையாகவுடைய நின்னை; அறிவாரோ அரியர் - உள்ளபடியாக வுணர்பவரோ
உலகத்தில் மிகவும் அருமையானவராவர். (எ - று.)