இயற்கையொளியும் இயற்கையழகும் உடைய கடவுள் என்பார். “அணியாதும் ஒளிதிகழும் ஆரணங்கு திருமூர்த்தி“ என்றார். திகம்பரிகளென்றும் சுவேதாம்பரிகள் என்றுங் கூறப்படுகிற சைனசமய வகுப்பினர் இருவருள், திகம்பரிகள் தமது கடவுளுக்கு ஆடையணிகளை அணிவதில்லை. அநந்த ஞாநம் எனப்பெறும் வரம்பிலா அறிவினால் இயற்கையாகவே எல்லாப் பொருள்களையும் அறிந்த முழுமுதற் கடவுள் என்று பல நூல்கள் உன்னைக் கூறுகின்றன; அவ்வாறு கூறினாலும் உலகம் முழுவதையும் தனக்கு உரிமையாகவுடைய நின்னை அறியக் கூடியவர் ஒருவரும் இல்லை யென்றான். |