பக்கம் : 149
 

சமண முனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்

191.

இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்
1குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்.
 

     (இ - ள்.) குணக்குன்று ஆயினார் - நற்குணங்களால் மலைபோல்
உயர்ந்தவர்களாகிய அந்தச் சமண முனிவர்கள்; இறைவனை இன்னணம் ஏத்தி - கடவுளை
இவ்வாறு வழிபட்டு; தம்தொழில் குறைவு இலா முடிந்த பின் - தாங்கள் செய்ய
வேண்டியசெயல் குறைவற முடிந்தபின்பு; மறம்மலி மன்னனை நோக்கி - வலிமைமிக்க
அந்தச் சுவலனசடியரசனைப் பார்த்து, அவற்கு அறம்மழை பொழிவது ஓர் ஆர்வம்
எய்தினார் - அவ்வரசனுக்குத் தாங்கள் அறவுரைபகர்தல் வேண்டுமென்பதான ஒப்பற்ற
விருப்பத்தை யடைந்தார்கள், (எ - று.) மற்று - அசை; வினைமாற்றுமாம்.

     எல்லாக் குணங்களாலும் சிறந்து உயர்ந்துள்ள சமணமுனிவர்களைக்
“குணக்குன்றாயினார்“ என்றார். திருவள்ளுவர், “குணமென்னுங் குன்றேறி நின்றார்“ என்றார்.
மறமலி மன்னனுக்கு அறமழை பொழியின், அதனால் அவ்வரசனேயன்றி உலகத்துயிர்களும்
இன்பத்தையடையும். ஆகவே சமண முனிவர்கள் அரசனுக்கு அறமழை பொழியும்
ஆர்வத்தினை அடைந்தனர். முனிவர்கள் தந்தொழிலைக் குறைவிலாமல் முடித்துக்
கொண்டதாகக் கூறியது, அருகக்கடவுளைப் புகழ்தல், வணங்குதல், மலர்கொண்டு
போற்றுதல் முதலியவைகளை என்க.
 

( 73 )

வேறு

சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்

192. தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்
என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே.
 

     (இ - ள்.) அவர் சென்று அமர்ந்த உழி - அந்தச் சமண முனிவர்கள் சென்று
அமர்ந்த இடமானது; தென்றலும் - தென்றற் காற்றும்; செழுமதுத் திவலைமாரியும் -
செழுமையான தேன்துளிகளின் மழையும், என்றும் நின்று அறாதது -
எப்பொழுதும்நிலைபெற்று நீங்காததான; ஓர் இளந்தண்
 


     (பாடம்) 1. குறைவிலர்.