(இ - ள்.) தாளுயர் தாமரைத் திருவும் - தண்டினால் உயர்ந்த செந்தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளும், தண்கதிர் நீள்எழில் ஆரமும் - குளிர்ந்த ஒளிகளையுடைய திங்கள்போல விளங்குகின்ற அழகிய முத்துமாலையும், நிழன்ற - தங்கிவிளங்கப்பெற்ற; கண்குலாம் தோள்இணை - காண்போரின்கண்கள் மகிழ்தற்குக் காரணமான அழகிய உன்தோள்கள் இரண்டும், செவ்வியோ என்ன - நன்மையாக இருக்கின்றனவோவென்று கேட்க, சூழ்ஒளிவாளவன் - சுற்றிலும் ஒளிவீசுகின்ற வாட்படையையுடைய சுவலனசடியரசன், மணிமுடி வணங்கிவாழ்த்தினான் - தனது அழகிய தலையால் வணங்கி முனிவர்களைப் போற்றினான், (எ - று.) |