பக்கம் : 162
 

அரசன் பொழில் விளையாடி நகரத்தையடைதல்

207.

வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்
தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்
நாமவே னரபதி நகர நண்ணினான்.
 

     (இ - ள்.) தாழ்கதிர் - சொரிகின்ற ஒளிகளையுடைய, நாமவேல் நரபதி -
அச்சத்தைத் தருகின்ற வேற்படையைத் தாங்கிய சுவலனசடியரசன், வார்பொழில் -
நீண்டசோலையிலே, வாமம் மேகலையவர் மனத்தில் - அழகிய மேகலையை அணிந்த தன்
மனைவியரது உள்ளத்திலே, காமவேள் இடம்கொள அருளி - காமவேள் இடம் பெறுமாறு
பலவகை விளை யாடல்கள்செய்து, கண்ஒளிர் தாமவேல் இளையவர்காப்ப - காண்போர்
கண்ணிற்கு அழகாக ஒளிவிடுகின்றதும் மாலையை அணிந்ததுமான வேற்படையையுடைய
பெண் மறவர்கள் மெய்காவலாக வர, நகரம் நண்ணினான் - இரதநூபுர நகரத்தை
அடைந்தான். (எ - று.)

“வாமமே கலையவர் மனத்திற் காமவேள் இடங்கொள அருளி“ என்றதன் கருத்து, தனது
உரிமை மகளிருடைய உள்ளத்தில் காம விருப்பம் உண்டாகுமாறு செய்து என்பதாம். வேள்
- விரும்பப்படும் அழகினை யுடையான். தாமவேல் இளையவர் என்பதற்கு
இளைஞர்களாகிய வீரர்கள் என்று உரை கூறுவாரும் உளர். வாமமேகலையவர் மனத்தில்
காமவேள் இடங்கொள விளையாடல்புரிந்த இடமாகலின் பெண்மறவர்களாகக் கொள்ளுதலே
தக்கது.

( 89 )

சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச்
செல்லுதல.

208. 1அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்
பகனகு சுடரொளி படர வேகினார்.
 

    (பாடம்) 1. அகநக ரரச ரோ டரசன