பக்கம் : 170
 

குணமுடையவனே, நின் மலரடி வணங்கினம் - உனது தாமரை மலர் போன்ற திருவடிகளை
வணங்கினோம் (எ - று.)

காமற் காய்ந்தோன் என்பது அருகன் திருப்பெயர்களுள் ஒன்று. “களிசேர்கணையுடைய
காமனையுங் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணலிவன் என்ப“ என்பது சீவகசிந்தாமணி,
காலனைக் காய்ந்தனை என்றது அழிவற்றோனாயிருக்கின்றனை என்றவாறு. போதி - அறிவு,
கடிந்தனை முதலியவற்றின்கண் ஐகாரம் முன்னிலைக்கண் வந்த அசைச்சொல்; “வான
வரம்பனை“ “கானகநாடனை“ என்பன போல.

( 97 )

இதுவுமது

216. ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்.
 

    (இ - ள்.) ஆர் அருள் பயந்தனை - எல்லாவுயிர்கட்கு மிக்க தண்ணளியைச்
செய்தாய், ஆழ்துயர் அவித்தனை - அடியார்களது மிகுந்த துன்பங்களைத் தீர்த்தருளினாய்,
ஓர் அருள் ஆழியை - ஒப்பற்ற அருளாகிய உருளையையுடையாய், உலகுடை ஒருவனை -
உலக முழுவதையும் தனதாகவுடைய ஒப்பற்ற, ஓர்அருள் ஆழியை - தலைவனே! சீர்அருள்
மொழிய - சிறந்த தண்ணளியுடன் சொல்லுஞ் சொற்களையுடையவனே; நின் திருவடி
தொழுதனம் - உன் அழகிய அடிகளை வணங்கினோம் (எ - று.)

ஆர் அருள் - நிறைந்த அருள்; வினைத்தொகை. “அறவாழி யந்தணன்“ என்பது
அருகக்கடவுளுக்கு ஒரு பெயராதலால் “ஓரருளாழியை“ என்றார்.

( 98 )

வேறு
சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்

217. கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்.