பக்கம் : 172
 

சுயம்பிரபை தன் தந்தைக்கு வழிப்பாட்டுப் பொருள் கொடுத்தல்

219.

வெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே
பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுதன்
னஞ்சடர் மெல்விரல் சிவப்ப 1வாழியின்
செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினாள்.
 

     (இ - ள்.) வெஞ்சுடர் வேலவர்க்கு உணர்த்தி - அரண்மனையை யடைந்த
சுயம்பிரபையானவள் தன்னுடைய வரவை வெவ்விய ஒளியை யுடைய வேற்படையைத்
தாங்கிய தன் தந்தைக்கு முன்னதாகவுணர்த்தி அவனுடைய உடன்பாடு பெற்று, பஞ்சுடைச்
சேவடி பரவ - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற தன்னுடைய சிவந்த அடிகளைத்
தோழியர் போற்ற, தன் அம்சுடர் மெல்விரல் சிவப்ப - தன் அழகிய ஒளியையுடைய
மென்மையான கால்விரல்கள் நடத்தலாற் சிவக்கும்படி, மெல்லச் சென்று - மெதுவாகத்
தன்னுடைய தந்தையின் இடத்திற்குச் சென்று, ஆழியின் செஞ் சுடர் அங்கையில் -
தந்தையின் மோதிரத்தின் செவ்வொளி திகழ்ந்த அழகிய கையில், சேடம் நீட்டினாள் -
மலர்ச் சேடத்தைக் கொடுத்தாள் (எ - று.)

தந்தையாக இருப்பினும் அரசனாகையாலும், அரசனுடைய சமயத்தை அறிந்து செல்வதுதான்
பருவமங்கையாகிய சுயம்பிரபைக்குத் தகுதியாகலானும், சுயம்பிரபை தன்னுடைய வரவை
அரசனுக்கு அறிவித்துச் சென்றாள்.

( 101 )

அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள்
சொல்லத் தொடங்குதல்

220. அல்லியி னரவவண் டிரிய வாய்மலர்
வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
முல்லையஞ் சிகழிகை 2முச்சி மோந்திவை
சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்.
 

     (இ - ள்.) சுடரும் வேலினான் மன்னவன் - ஒளிவிடுகின்ற வேற் படையை
யுடையவனாகிய சுவலனசடியரசன், அல்லியின் அரவவண்டு இரிய 


    (பாடம்.) 1. வாளியின், வாளியற். 2. முருக்கு.