பக்கம் : 173
 
- அணிந்துள்ள மலர்களின் உள்ளிதழ்களிற் பொருந்தியுள்ள வண்டுகள் அகலும்படி,
ஆய்மலர் வல்லியின் வணங்கிய - சிறந்த பூங்கொடியைப்போலப் பணிந்த, மகளை - தன்
மகளான சுயம்பிரபையை, முல்லைஅம் சிகழிகை முச்சி மோந்து - முல்லைப்பூ மாலையை
அணிந்த அழகிய மயிர்முடியையுடைய உச்சியை மோந்து, இவை சொல்லிய தொடங்கினான்
- இந்த மொழிகளைச் சொல்லலானான் (எ - று.)

அல்லி - அகவிதழ். “அல்லி அகவிதழ்; புல்லி புறவிதழ்“ என்பன சூத்திரங்கள். அல்லி -
பூந்தாது எனினுமாம். சொல்லுபவைகளை அடுத்துவருஞ் செய்யுள்களில் காண்க. 

( 102 )

ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்

221. தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே
பூந்துண ரோதிநீ 1பிறந்து 2பொன்செய்தார்
வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே.
 

     (இ - ள்.) தேம்துணர் பலவுளவேனும் - தேனையுடைய பூங்கொத்துக்கள் பல
இருந்தாலும், செங்குழை மாந்துணர் - செந்நிறமான தளிர்களையுடைய மாமரத்தின்
பூங்கொத்து, வயந்தனை மலரத் தோன்றும் - வசந்தகாலம் விளக்கமடையும்படியாக மலரும்,
பூந்துணர் ஓதி - பூங்கொத்துக்களை யணிந்த கூந்தலை யுடையவளே! நீ பிறந்து - நீ
பிறந்தபடியினாலேயே, பொன்செய்தார் வேந்து இறைஞ்ச - பொன்னாற் செய்யப்பட்ட
மாலையை அணிந்த அரசர்கள் வந்து வணங்கும்படி, யான் விளங்குகின்றது - நான் சிறந்து
விளங்குபடியாகியது. (எ - று.)
“மலர்கள் பல இருந்தாலும் மாம்பூவினால் வசந்த காலத்திற்குப் பொலிவு உண்டாவதுபோல,
சுற்றத்தார் பலர் இருந்தாலும், நீ பிறந்த பின்புதான் வேற்றுநாட்டரசர் பலர் வந்து
வணங்கும்படியான பெருமை எனக்கு உளதாயிற்று“ என்று அரசன் தன்மகளைப் பாராட்டிக்
கூறுகிறான். முன்னிரண்டடிகள் உபமானம்; பின்னிரண்டடிகள் உபமேயம். வயந்தனை,
ஐ,சாரியை.

( 103 )
222. கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா
மங்கணீ ருலகெலா மறியப் பட்டது 

    (பாடம்) 1. பிறந்த, 2. பின்செய்தார்.