பக்கம் : 175
 

தாமரை பூத்த தடாகத்தை அன்னப்பறவை வண்டு முதலிய சிறந்த உயிர்கள் சேருமே
யல்லாமல், காக்கை முதலிய கீழ் உயிர்கள் அடைய மாட்டா; அதைப்போல் நீ பிறந்தபின் இந்த நாட்டில் நல்லவர்கள் சேரலானர் களேயல்லாமல், தீயவர்களால் பீடிக்கப்பட்டுத்
தொல்லைக்குள்ளாக வில்லை யென்று அரசன் தன்னுடைய மகளைப் பாராட்டுகிறான்.
பொய்கை மானிட ரால் ஆக்கப்பெறாத நீர்நிலை என்பது நச்சினார்க்கினியர் கொள்கை.

( 105 )

224. வானகத் திளம்பிறை வளர வையகம்
ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே
நானகக் குழலிநீ வளர நங்குடி
தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே.
 

     (இ - ள்.) வான் அகத்து இளம்பிறை வளர - வானத்திலே இளமையான
பிறைத்திங்கள் உண்டாகி வளர்தலால், வையகம் - நிலவுலகம், ஈன் அகத்து இருள்கெட -
இவ்விடத்து இருளானது நீங்க, இன்பம் எய்தும் - மகிழ்ச்சியை அடையும், நானகக் குழலி -
கத்தூரிப் புழுகு பூசிய கூந்தலையுடையவளே! நீ வளர - நீ பிறந்து வளர்தலால், நம்குடி -
நமது குடியானது, தான் அகத்து இருள்கெடத் தயங்குகின்றது - தன்னிடத்திலே பகையிருள்
ஒழிந்து விளங்குகின்றது. (எ - று.)

விண்ணில் இளம்பிறை தோன்றி வளர்தலால் நிலவுலகம் இருள்கெட இன்பமடைவதுபோல;
நீ தோன்றி வளர்தலால் நமது குடி பகையிருள்கெட விளக்கமடைகின்றது என்கிறான்
அரசன். ஈனகம் - இவ்விடம்.

( 106 )
225. 1கண்பகர் மல்லிகை கமழக் காதலால்
சண்பகத் 2தனிவனந் தும்பி சாருநீ
பெண்பகர் 3திருவனாய் பிறந்து நங்குடி
மண்பக ருலகெலா மகிழச் செல்லுமே.

   (பாடம்.) 1. கண்மகிழ், 2. தினிவனம், தளிவனம், 3. திருவனாட் பிறந்து,