பக்கம் : 177
 

மன்னன். கொவ்வை, மவ்வல் என்ற கொடிகளின் பெயர் அவற்றின் பழத்திற்கும் பூவிற்கும்
முதலாகுபெயர். இதழ் - உதடு. அணியன கூறி - அழகிய புனைந்துரை மொழிகளை
உரைத்து. நும்தாய் என்றது, யான் எம்மூர்க்குச் செல்வேன் என்றாற்போன்று அவளுடன்
பிறந்தானையும் உளப்படுத்தி நின்றது. அவ்வை, மவ்வல் - முதற்போலி ஒளவை, மௌவல்.
அடப்பட்டது அடிசில் என உணவுக்குக் காரணப் பெயர்.

( 108 )

கட்டளையும் மகிழ்ச்சியும்

227. பல்கலம் பெரியன வணியிற் பாவைத
னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
மல்கிய 1முடியினான் மகிழ்ந்து நோக்கினான்.
 

     (இ - ள்.) செம்பொனால் மல்கிய முடியினான் - செம் பொன்னினால் செய்யப்பெற்று
விளங்குகிற திருமுடியையுடையவனான சுவலனசடியரச னானவன்; பல்கலம் பெரியன
அணியில் - பலவகை யணிகலன்களைப் பெரியனவாக வணிந்தால், பாவைதன் அல்குல்
நோம் என - சுயம்பிரபை யினுடைய இடையானது வருத்தத்தை யடையுமென்று, சிலம்பு
அணிந்து - சிலம்பு என்னும் அணிகலனைப் பூண்டு, என் திருமகள் - என்னுடைய அழகிய
செல்வியே! மெல்லவே செல்க என்று - விரைந்து செல்லாமல் மெதுவாகவே செல்க என்று
கூறி, மகிழ்ந்து நோக்கினான் - அவள் அவ்வாறு செல்வதைப் பார்த்து மகிழ்ந்தான்
(எ - று.)

நோன்பினால் தளர்ந்துள்ள சுயம்பிரபை, பெரியவைகளான பல அணிகலன்களை அணிந்து
சென்றால் மேலும் வருத்தத்தை அடைவா ளாகலின், சிலம்பை மட்டும் அணிந்து
மெதுவாகச் செல்லுமாறு அரசன் கட்டளையிட்டான்.

( 109 )

அரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்

228. மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
பெண்ணருங் கலமிது பெறுதன் 2மானுடர்க்
கெண்ணருந் தகைத்தென 3விறைவ னெண்ணினான்.

  (பாடம்) 1. முடியவன். 2. மானுயர்க்கு, 3. இறைவ னெய்தினான். சூ. 12