பக்கம் : 181 | | காமமுங் காதலும் | 232. | காதலா 1லறிவது காமங் காதலே யேதிலா ருணர்வினா 2லெண்ண லாவதன் றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ லோதினா ருரைவழி யொட்டற் பாலதே. | (இ - ள்.) காமம் - சிற்றின்ப நோக்கமானது, காதலால் அறிவது - காதலைக்கொண்டு ஒருவாறு உணரப்பெறும், காதல் - சிற்றின்பவுணர்வு, ஏதிலார் உணர்வினால் எண்ணல் ஆவது அன்று - மற்றையோருடைய உணர்ச்சியினால் அளந்தறியக்கூடியது அன்று, ஆதலான் - ஆகையினாலே, மாதராள் திறத்தில் - சுயம்பிரபையின் செயலில், ஆணைநூல் - அறநூலை, ஓதினார் உரைவழி - படித்தறிந்தவர்களது சொல்லின் வழியே, ஒட்டற்பாலது - பொருந்த நடக்குதல் வேண்டும். (எ - று.) காதலைக்கொண்டு காமத்தை அளவுபடுத்துதல் வேண்டும்; காத னுண்மையையும் இன்மையையும் மற்றையோர் அறியார். சுயம்பிரபை திறத்தில் நாமாகச் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அமைச்சர்களைக் கூட்டிக் கலந்தெண்ணியே ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும் என்று அரசன் ஒரு முடிவிற்கு வருகிறான். ஏதிலார் - அயலார்; ஏதும் தொடர்பில்லாதவர் என்க. | ( 114 ) | அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும் | 233. | தன்னுணர் 3பொறிபிறர் தங்கண் கூட்டென வின்னண மிருவகைத் திறைவர் 4வாழ்க்கையே தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி தின்னண மியற்றுகென் றமைச்ச ரேவுவார். | (இ - ள்.) இறைவர் வாழ்க்கை - அரசர்களுடைய வாழ்கையானது, தன் உணர்பொறி - தம்முள்ளுணர்வாகிய ஊழான் ஆவது, பிறர் தங்கள் கூட்டுஎன - ஏனையோர் கூட்டுறவாலாவது என்று, இன்னணம் இருவகைத்து - இவ்வாறு இரண்டு வகைப்படும், தன்னுணர் பொறிப்புலம் தன்னின் ஆம் - தன்னுணர்வு கொண்டு எண்ணிச் செய்யும் செயல் தன்னாலேயே உண்டாம், பிறிது - மற்றொன்றோ, இன்னணம் இயற்றுக என்று - இவ்வாறு செய்க என்று, அமைச்சர் ஏவுவார் - அமைச்ச ரானோர் சொல்லிச் செய்யுமாறு செலுத்துவார்கள், (எ - று.) |
| (பாடம்) 1. ஆவது. 2. எண்ணலாவதன்று. 3. பொறிப்புலம் பிறர்கண் கூட்டென. 4. வாட்கைதான். | | |
|
|