பக்கம் : 191 | | | பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப் பூங்குலா மலங்கண் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே.
| (இ - ள்.) தளை அவிழ் தயங்குதாரீர் - கட்டவிழ்ந்த மலர்கள் பொருந்திய மாலையை அணிந்த அமைச்சர்காள்!, வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் - மிகுந்த நீர் பொருந்திய கடலாற் சூழப்பட்ட உலகத்தினைப் பாதுகாக்கும் உயரிய அரசாட்சிச் சுமையானது, ஒருவனாலே தாங்கலாந் தன்மையமைந்ததன்று, பாங்கு அலார் பணிய - நட்பற்ற பகைவர்களும் தன்னைப் பணிந்து தன்வழியொழுக, சூழும் நூலவர் பாகமாக - தன்னைச் சூழ்ந்துள்ள அறநூல்களை யுணர்ந்தவர்களான அமைச்சர்கள் பக்கத் துணையாக, பூங்குலாம் அலங்கன் மாலைப்புரவலன் - மலர்களமைந்து விளங்கும் அசைகின்ற மாலையை அணிந்த அரசனானவன், பொறுக்கும் - தான் அரசாட்சிச் சுமையைத் தாங்குவான் (எ - று.) அன்றே : அசை. அரசியற்சுமை அரசனாகிய ஒருவனால் மட்டும் சுமக்க வியலாத தொன்று. அமைச்சர்களும் துணையாக நின்று தாங்கியபொழுதே இனிது தாங்கப்படு மியல்யுடையது என்கிறான் அரசன். வீங்கு நீர் - மிகுதியாகிய நீர்; எனவே கடலுக்காயிற்று. நுகம் - நுகத்தடி, பாரம், நடுவு நிலைமை, வலிமை, கதவின் கணையமரம். | ( 7 ) | அரசன் முகமன் மொழிதல் | 246. | அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான் கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச் செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே. | (இ - ள்.) அற்றம் இன்று உலகம் காக்கும் - சோர்வின்றி உலகத்தைப் பாதுகாக்கும், அருந்தொழில் புரிந்து நின்றான் - அரிய அரசாட்சித் தொழிலை மேற்கொண்டு நின்ற மன்னனுக்கு, கற்றவர் - அவனுடைய அமைச்சர்கள் - மொழிந்தவாறு - ஆராய்ந்துணர்த்தியபடியே கழிப்பது - வினைகளைச் செய்து முற்றுவிப்பது ஒன்றே, கடனது ஆகும் - கடமையாகும். தெருண்டவர் - நூல்களைக் கற்றுத் தெளிந்த அமைச்சர்க்கு அவற்கு - அங்ஙனம் தம்வழிப்பட்டு நின்ற அரசனுக்கு, உறுதி நோக்கி - ஆக்கமானவற்றைக் குறிக்கொண்டு அவற்றைப் பெறுதற்குரிய வழிகளை வகுத்துக் காட்டலும், பழிவரு வழிகள் தூர - அவனுக்குப் பழியுண்டாதற்குரிய நெறிகளை அழித்து, மேலும்; செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி - அவனுடைய பகைவர்களை அழிக்கும் உபாயங்களைக் கண்டுணர்த்தலும், கடவ - இன்னோரன்ன பற்பல கடமைகளும் உள்ளன. (எ - று.) மன்னன் கடமை அமைச்சர் சொற்படி நடத்தல் ஒன்றே; அமைச்சர்கட்கு அரசனுடைய ஆக்கங்கருதி ஆற்றவேண்டிய கடமைகள் பற்பல உள்ளன என்பதாம். “அரசுவாளின்மேல் வரும் மாதவம்“ என்பது பற்றி அருந் தொழில் என்றார். கற்றவர் என்றது ஈண்டமைச்சரை. கடனது என் புழி அது பகுதிப் பொருள் விகுதி. மற்று : வினைமாற்று. பழிவழிகள் தூர என்றதனால் நன்னெறிகளை வகுத்து என்க. செற்றவர் - பகைவர். தெருண்டவர் - ஈண்டமைச்சர். இஃது அரசன் அமைச்சர்க்குக் கூறிய முகமன். | ( 8 ) | அரசனும் அமைச்சர்களும் | 247. | 1செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான் செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்துகூறி அறுந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார். | (இ - ள்.) அரசன் ஆவான் - உலகத்தை நன்கு பாதுகாக்கக்கூடிய அரசனாவான் யாவன், என்னின், செறிந்தவர் தெளிந்த நூலார் - நற்குணநற் செயல்கள் செறிந்துள்ளவர்களும் அறநூல்களையுணர்ந்த வர்களுமாகிய அமைச்சர்கள், சிறந்தவை தெரிந்து சொன்னால் - நன்மையான செயல்களை ஆராய்ந்து கூறினால், அறிந்து - அவர்கள் கூறியதனை நன்குணர்ந்து, அவை அமர்ந்து செய்யும் அமைதியான் - அவைகளை விரும்பிச் |
| (பாடம்) 1. செறிந்தவை தெளிந்து கூறி. | | |
|
|