சோர்ந்ததேன்; இறாலில் நின்றும் ஒழுகியதேனுமாம். குறிஞ்சிக்குப் பூக் காந்தளும், வேங்கையும், சுனைக்குவளையுமாம். காந்தள் மலரை மகளிர் கைக்கு உவமையாகக் கூறுவர். “பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை, நன்னாளே நாடிமலர் தலால்“ வேங்கை வான்செய் நாண் மெய்விரிந்தன என்றார். இனி-வான்மீனின் உருவமுடைய மலர்களை மலர்ந்தன எனினுமாம். தேனெய்-இருபெயரொட்டு. இனிக் கைவிரிந்தன முதலியவற்றைக் காந்தள் முதலியவற்றிற்கு அடை மாத்திரையாகக்கொண்டு காந்தள் முதலியன சோர்ந்ததேன் குன்றெலாம் விரிந்தன என ஒரு தொடராக்கினுமாம். |