(இ - ள்.) உருவத்தார்மேல் - அழகிய மாலையின்மீது, பூணும் நூல் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப! - அணிகின்ற நூலானது விளங்கித் தோன்றும் பொன்மலை போலும் மார்பை யுடையவனே, கோணை நூற்று - பிறருக்குத் துன்பத்தைச் செய்து, அடங்க மாட்டாக் குணமிலார் குடர்கள் நைய - கீழ்ப்படிதலற்ற நற்குணமில்லாதவர்களின் குடர்குழம்பும்படி, ஆணை நூற்று - கட்டளைகளைப் பிறப்பித்து, அடங்கச் சுரக்கும் அரசர் தம் அருளினால் - எல்லாவற்றையும் ஒருங்கே புரக்கும் அரசர்களுடைய தண்ணளியினால், நூல்பேணும் புலவர் மாண்பும் - அறநூல்களைப் போற்றுகின்ற அமைச்சர்களுடைய பெருமையும்; பெருகுவது என்றான் - வளர்வதாகும் என்று கூறினான், (எ - று.) புலவர் ஈண்டு அரசியலறிவுமிக்க அமைச்சர்களை உணர்த்தி நின்றது. சூரியன் ஒளியாலே சூரியகாந்தம் ஒளி கால்வது போன்றே அரசன் அருளாலே அமைச்சரும் அறிவுரை கூறுந் தகுதியை உடைய வராகின்றனர். ஆதலால் அமைச்சர் மாண்பிற்கு அரசர் அருளே காரணமாகும் என்று மன்னனைப் பாராட்டிப் பேசியபடியாம். |
இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர் (இ - ள்.) போழ்கதிர் - இருளைப் பிளக்கும் ஒளியை, பொங்கி பொழிந்து - மிக்கு வெளிப்படுத்தி, புலால் நிணம் பொழியும் வேலோய் - பகைவர் புலாலாகிய ஊனைச் சிந்துகிற வேற்படையை யுடையவனே, கதிர்த் தொழுதி மாலைசூழ் - ஒளிப்பிழம்பின் கூட்ட வரிசையால் சூழப்பெறுகின்ற, சுடர்ப் பிறைக் கடவுள் தோன்றி - வெள்ளிய பிறைத்திங்கள் எழுந்து, |