தாழ்கதிர் சொரிந்த போழ்தில் - வீழாநின்ற ஒளிப்பிழம்பை வெளிப்படுத்திய காலத்தில், வீழ்கதிர் விளங்கு சந்திரகாந்தம் என்னும் வட்டம் - விழுகின்ற ஒளியானது விளங்குகின்ற சந்திரகாந்தக் கல்லானது, வெள்ளம் நீர் விரியும் - மிகுதியான நீரைப்பொழியும் (எ - று.) அன்றே: அசை. தொழுதி - திரள் - மாலை - ஒழுங்கு; இயல்புமாம். தாழ்கதிர் - வினைத்தொகை. சந்திரகாந்தம் - திங்கள் ஒளிப்பட்ட உடன் நீர்காலு மியல்புடைய தொருகல். |
(இ - ள்.) விண் அளித்து இலங்கும் வெள்ளி - விண்ணுலகத்தைப் பாதுகாத்து விளங்கும் சுக்கிரனைப்போல, விரிந்த வெண்குடையினாற்கு - விரிக்கப்பெற்று விளங்குகின்ற வெண்கொற்றக் குடையையுடைய அரசனுக்கு; உலகம் எல்லாம் கவின்பெறக் காவல்பூண்டு - உலகங்களையெல்லாம் சிறப்புடன் பாதுகாக்கும் கடமைப்பாட்டை மேற்கொண்டு, கண் அளித்து - கண்போலப் பாதுகாத்து, தண் அளி தயங்கும் - இனிய அருளானது விளங்கப்பெறுகிற, செங்கோல் தாரவர் தவத்தினால் - செங்கோலையும் மாலையையுமுடைய அரசர்களின் சிறப்பால், இனிய நூலோர் மந்திரம் - நல்ல அமைச்சர்களுடைய சூழ்ச்சியானது, மண்அளித்து மலரும் என்றான் - உலகத்திற்கு நன்மையைச் செய்து சிறப்படையும் என்று கூறினான் (எ - று.) அரசர்களுடைய சிறப்பினாலேதான் அமைச்சர்களுடைய சூழ்ச்சி பயனடையும் என்று கூறுகின்றான். |