பக்கம் : 216
 

எல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது

280.

எல்லா விருதுவு மீனும் பொழிலின
தெல்லா நிதியு மியன்ற விடத்தின
தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
எல்லாப் புலமு நுகர்தற் கினிதே.
 

      (இ - ள்.) மேலும் அந்த வடசேடியானது; எல்லா இருதுவும் - கார், கூதிர்,
முன்பனி, முன்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவக் காலங்களை யெல்லாம்,
ஈனும் பொழிலினது - உணடாக்குஞ் சோலை களையுடையது, எல்லாநிதியும் இயன்ற
இடத்தினது - சங்கநிதி பதுமநிதி முதலிய எல்லாச் செல்வங்களும் அமைந்த
இடத்தையுடையது, இராப்பகல் இரவும்பகலும், எல்லா அமரர் கணமும் - எல்லாத்
தேவர்களுடைய கூட்டங்களும், எல்லாப் புலமும் நுகர்தற்கு இனிது - மெய் வாய் கண்
மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளாலும் நுகர்தற்குரிய எல்லாப் புலன்களையும்
உடைமையான் மிகவும் இனிமையை யுடையது. (எ - று.)

இதனால் பொழில் நலத்தையும் பொருள் நலத்தையும் உணர்த்தினான். இருது - பருவம்.
புலம் - ஐம்புலன்கள். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன.

( 41 )

அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்

281. பொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன
பொன்னிதழ்த் தாமம் 1பொழில்வா யவிழ்ப்பன
பொன்னிதழ்த் தாது 2மணிநிலம் போர்ப்பன
பொன்னிதழ்த் தாது துகளாய்ப் 3பொலிவன.
 

      (இ - ள்.) பொய்கையுள் - அவ்வுத்தர சேடிக்கண் உள்ள வாவிகள்தோறும், பூப்பன
 - மலர்வன, பொன் இதழ் தாமரை - பொன்னிறமான இதழ்களையுடைய தாமரை
மலர்களேயாம். பொழில் வாய் - அங்குள்ள பூஞ்சோலைகளிடத்தே, அவிழ்ப்பன -
இதழ்விரி்த்து மலர்வன, பொன் இதழ் - பொன்னிற இதழ்களையுடைய, தாமம் -
புனையப்பட்ட மாலைகளை ஒத்த கோட்டுப் பூக்களேயாம், மணிநிலம் - அழகிய
தரையிடமெங்கும், போர்ப்பன - மறைத்துக் கிடப்பன, பொன் இதழ்த்தாது -


 (பாடம்) 1. பொழில்வாய் வீழ்ப்பன: வாயவிழ்ப்பன. 2. மணிநலம். 3. பொழிவன.