(இ - ள்.) பஞ்சுஆர் அகல்அல்குல் பாவையர் - துகில் பொருந்திய அகன்ற அல்குலையுடைய கொல்லிப்பாவை போன்ற மங்கையர்களின், பூண்முலைச் செஞ்சாந்து அணிந்து திகழ்ந்த மணிவண்டு - அணிகலன்களையணிந்த கொங்கைகளினிடத்துப் பூசப்பெற்ற செவ்விய சந்தனக்குழம்பில் படிந்து அச்சாந்து மேலே யமையப்பெற்று விளங்கிய அழகிய ஆண்வண்டானது, மஞ்சு ஆர் பொழிலுள் - முகில்கள்படியும் பொழில்களினிடத்திலே, வளர்பெடை கண்டு - தங்கியிருந்த தன் பெட்டைவண்டைப் பார்த்து, அதற்கு அஞ்சா ஒளிக்கும் - அப் பெட்டைவண்டுக்கு அஞ்சி யொளிக்கும், மயலது அது - ஒரு மயக்கத்தையும் உடையது அந்த நகரம், (எ - று.) ஆண்வண்டு அஞ்சுதற்குக் காரணம் செஞ்சாந்தணிந்து திகழ்கின்றமையே என்க. செஞ்சாந்தினால் பெடை ஆணிடத்தில் ஊடல் கொள்ளுதற்கு இடமிருத்தலைக் காண்க. |
(இ - ள்.) மொய் பொழில் எல்லாம் - அந்நகரத்தைச் சூழ்ந்துள்ள பூஞ்சோலைகள் அனைத்தும், பாவையர் - மகளிர்கள், பாசிலை மென்றழைப் பள்ளியுள் - பசிய மெல்லிய தழையா லியற்றிய படுக்கைமிசைக் கிடந்து தம் காதலரோடு ஆடியதனால், தூசினுள் நின்று சொரி மணிக்கோவையும் - அம்மகளிர் தம் ஆடையுள்ளிருந்து அற்றுச் சொரிந்த மணிமாலைகளாலும், பூசின சாந்தும் - அவர்கள் பூசியிருந்த சந்தனத்தாலும், பிணையலும் - மலர்மாலைகளானும், போர்த்து - போர்க்கப்பட்டு, இடை மூசின வண்டின் - இடையிடையே மொய்த்த வண்டுக் கூட்டங்களையும் உடையனவாயின, (எ - று.) இதனால் அந்நகரத்தின் கண்இன்றமிழியற்கை யின்பம் மிக்கிருந்தமை உணர்த்தப்பட்டது. மொய்பொழில் - செறிந்த பொழிலுமாம். வண்டின - வண்டுகளையுடையன. சோலை போர்க்கப்பட்டு வண்டுகளை உடையன என்க. |