பக்கம் : 225 | | காதல் தூது | 294. | காம விலேகையுங் கற்பக மாலையும் சேம 1மணிநகைச் செப்பினு ளேந்துபு தூமக் குழலவர் தூது திரிபவர் தாமத் 2தெருவிடை தாம்பலர் கண்டாய். | (இ - ள்.) தாமத் தெருவிடை - அந்நகரத்தின் ஒழுங்கு பட்ட தெருவினிடத்திலே, தூமக்குழலவர் - அகிற்புகை யூட்டப்பட்ட கூந்தலையுடைய மங்கையர், காம இலேகையும் - காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தியையும், கற்பகமாலையும் - கற்பகப் பூமாலையும், சேம மணிநகைச் செப்பினுள் ஏந்துபு - பாதுகாப்பு மிகுந்த மணியினால் செய்யப்பெற்ற ஒளியையுடைய சிமிழுக்குள் வைத்து ஏந்தி, தூது திரிபவர்தாம் பலர் கண்டாய் - தூதாகப் போய் வருபவர்கள் பலராவர், உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) தூது திரிய நேர்ந்தமை ஊடல் விலக்குதற்கு என்க. இலேகை - எழுத்து, காம இலேகை - காதலைப்பற்றி எழுதப்பட்ட செய்தி. | ( 56 ) | காமக்கடலைக் கலக்கும் தீமைத்தொழில் | 295. | தாமத் தொடையல் பரிந்து தமனிய வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள் காமக் கடலைக் கலக்குங் கழலவர் தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே. | (இ - ள்.) தாமத் தொடையல் பரிந்து - பூவினாலாகிய மாலைகளை நீக்கி, தமனிய வாமக்கலங்கள் புலம்ப - பொன்னினால் ஆகிய அழகிய அணிகலன்கள் ஒலித்தலைச் செய்ய, மகளிர்கள் - பெண்களின், காமக்கடலை - சிற்றின்பக்கடலை, கலக்கும் கழலவர் - கலங்குமாறு செய்யும் வீரக்கழலை யணிந்த ஆடவர்களின், தீமைத் தொழிலவை - கொடிய செயல்களானவை, தேர்ந்துள - நன்கு பயிற்சியடைந்துள்ளன, அன்றே: ஈற்றசை, (எ - று.) இந்தக் காமத்தொழிலைத் தவிரக் கலங்கச் செய்யும் வேறு தீமைத் தொழில், அந்நகரத்தில் யாதும் இல்லை என்க. | ( 57 ) |
| (பாடம்) 1. மணநகை. 2. தெருவிடைத்தாம். | | |
|
|