பக்கம் : 228
 

உறுதிச் சுற்றம் முதலிய எல்லாவற்றானும் அச்சுவக்கிரீவன் சிறந்தவன் என்பது இதனால்
உணர்த்தப்பட்டது. சுற்றம் ஐம்பெருங்குழுவும் எண்பேரா யமும்; உரிமைச் சுற்றமுமாம்.
கொற்றம் - அரசுரிமையுமாம். குலத்தது; அது: பகுதிப் பொருளது. வெற்றிவேலவன் -
அச்சுவக்கிரீவன்.

( 60 )

அச்சுவக்கிரீவனுடைய தம்பியார்கள்

299. தம்பியார் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்
வம்யுயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள்
கண்டாய்
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் 1வெதுப்பு நீரார்.
 

     (இ - ள்.) தம்பியர் - அவ்வச்சுவக்கிரீவனுக்கு இளவலா யமைந்தவர்கள்,
நீலத்தேரான் - நீலரதன், தயங்கு தார் நீலகண்டன் - விளங்குகின்ற மாலையை அணிந்த
நீலகண்டன், வம்புயர் மகரப்பேழ்வாய் வயிரமாகண்டன் - தீச்செயல் மிகுந்த மகரமீனின்
பெரிய வாயைப்போன்ற வாயினையுடைய வயிரமாகண்டன், வண்டும் தும்பியும் துவைக்கும்
தொங்கல் சுகண்டன் - பெண்வண்டுகளும் ஆண்வண்டுகளும் சேர்ந்து துவைக்கப்பெறுகிற
மாலையையணிந்த சுகண்டன், என்று இவர்கள் - என்று கூறப்பெறும் இவர்கள் ஆவார்,
வெம்பிய உருமுத் தீயும் - இவர்கள் மிகுதியாகக் கொதிக்கும் ஊழிக்காலத்து நெருப்
பிடியினையும், கூற்றமும் - உயிரையும் உடலையும் வேறுபிரிக்குங் காலனையும், வெதுப்பும்
நீரார் கண்டாய் - வருத்தப்படுத்துகிற தன்மையையுடையவர்கள், அறிந்துகொள்வாயாக!
(எ - று.)

“தம்பியுடையான் படைக்கஞ்சான்“ என்பவாகலின் அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்களாகிய
நீலரதன், நீலகண்டன், வயிரமா கண்டன், சுகண்டன் என்னும் இவர்களுடைய தன்மை
இப்பாட்டில் இயம்பப் பட்டது.

( 91 )

அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்

300. படையின தமைதி 2கூழின் பகுதியென் றிவற்றின் 3பன்மாண்
புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே

(பாடம்) 1. வெதும்பு. 2. கூறின். 3. மாண்பும்.