பக்கம் : 230
 

பெரிய நீரான் - அவன் முக்காலமுங்கூறும் பேராற்றல் அமையப் பெற்றவன், காணும்
நூற்புலமை - அவனறிந்துள்ள நிமித்த நூல் அறிவை, யாரும் காண்பவர் இல்லை - யாரும்
இவ்வளவென்று அளந்தறிபவர் இலர், கண்டாய் - தெரிந்துகொள்வாயாக, (எ - று.)

இச்செய்யுளால் அச்சுவக்கிரீவனுடைய அமைச்சன் திறமும் சோதிடன் திறமும் கூறப்பட்டன.
அறிவு நலம் செறியப்பெற்ற அமைச்சனையும் நிமித்திகனையும் துணையாகவுடையவன்
எதற்கும் அஞ்சான் என்பது குறிப்பு.

( 63 )

அச்சுவக்கிரீவன் தன்மை

302. தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்
கென்னலா 1லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான் பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி
மன்னெலா மவனை யன்றி 2வணங்குவ தில்லை மன்னா.
 

     (இ - ள்.) மன்னா - அரசனே!. சார்ந்தவர் - அவனையடைந்தவர்கள், தன் அலால்
தெய்வம் பேணார் - அவனையல்லாமல் வேறு தெய்வத்தைப் போற்றமாட்டார்கள், தானும்
- அவ்வச்சுவக்கிரீவனும், என் அலால் இவருக்கு உற்றார் இல்லை யென்று -
என்னையல்லாமல் இவர்களுக்குப் பற்றுக் கோடானவர்கள் வேறு எவரும் இலர் என்று,
சார்ந்தார்க்கு இரங்கும் நீரான் - தன்னையடைந்தார் மாட்டு அருள்
சரக்குந்தன்மையையுடையவன், பொன் எலாம் - பொன்களையெல்லாம் (ஒன்பான்
வகைமணிகளையும்) நெதியம் - செல்வமாக (திறைப்பொருளாக எனினும் ஆம்), ஆர -
மிகுதியாக, பொழிந்திடுகின்ற - சொரிகின்ற, பூமி மன்எலாம் - நிலவுலகத் தரசர்களனை
வரும், அவனையன்றி வணங்குவது இல்லை - அம்மன்னனை யல்லாமல் வேறே
கடவுளரைப் போற்றுவதும் இல்லை, (எ - று.)

உலகத்தார்கள் அச்சுவக்கிரீவனைத் தெய்வமாகப் போற்றுகிறார்கள். அச்சுவக்கிரீவனும்
தன்மாட் டன்புடையார்களைப் பாதுகாக்கின்றான் என்று அமைச்சன் அரசனுக்குக்
கூறுகின்றான்.

( 64 )


(பாடம்.) 1. இவனொடுற்றார். 2. வணங்குவதில்லை.