(இ - ள்.) குளிறு - முழங்குகின்ற, வான் உழுவை அன்னான் - வாளைப்போல் தீமையைச் செய்யும் புலிக்கு ஒப்பானவன், குமார காலத்து முன்னே - காளைப்பருவத்திற்கு முன்னரே, நூறுகளிறு எடுக்கல் ஆகா - நூறு ஆண் யானைகளாற் கூட எடுக்கமுடியாத, கல்திரள் - பெரிய கற்பாறை ஒன்றை, ஒளிறுவாள் உழவன் - ஒளிசெய்கின்ற வாட்படையை யுடையவன், கடகக் கையால் ஏந்தி - காப்பினையணிந்த தன் கைகளால் எடுத்து, உருட்டி வட்டாட - உருளச் செய்து சூதாடுகருவிக் காயைப் போல் ஆட்ட, அன்றே - அன்றுமுதலே, வெளிறு இலாக் கேள்வியானை - குற்றமற்ற கல்வியறிவுடைய அவனது ஆற்றலைக் கண்டு, விஞ்சையர் அஞ்சியிட்டார் - வித்தியாதரர்கள் அச்சங்கொண்டு விட்டார்கள், (எ - று.) அச்சுவகண்டன் இளைஞனாக இருக்கும்போதே செய்த வீரச்செயல் ஒன்றால், வித்தியாதர மன்னர்கள் அச்சுவகண்டனுக்கு அஞ்சிக் கீழ்ப்படிந்தனர் என்னும் செய்தி இதில் கூறப்பட்டது. |
(இ - ள்.) மன்னா - அரசனே!, முன்தவம் உடைமையாலே - அவன் முன்னாட் செய்த தவத்தினை யுடையவனாகையால், மூரிநீர் உலகம் எல்லாம் - பெருமை பொருந்திய கடலாற் சூழப்பெற்ற வுலகத்திலே, அவன் ஏவல்கேளா மன்னவர் இல்லை - அவனுடைய பணியைக் கேட்டுச் செய்யாத அரசர்களில்லை, நல்தவ நங்கை தோன்றா முன்னம் - நல்ல தவத்தினை |