பக்கம் : 239
 

கண்ணையுடையவளாகி சுயம்பிரபை மணமகளாம் தகுதி பொருந்தியவளாவாளோ? (எ - று.)

அச்சுவக்கிரீவன் அகவை மிகுந்தவன் என்று உலகத்தார் உரைக்குஞ் செய்தியை இதனால்
கூறினான். அதனால் சாதகவோலை காமப் பருவத்தாள் என்றதற்கு அச்சுவக்ரீவன்
அமையாமை காட்டினான்.

( 76 )

அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்

315. கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு 1மடமாதின்
றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்
பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம்.
 

     (இ - ள்.) கண்ணார் கோதை - காட்சிக்கு இனிமை பொருந்திய மாலையினையும்,
காமரு வேய்த்தோள் - அழகிய மூங்கில்போன்ற தோள்களையும் உடைய, கனகப்பேர்
மண்ணார் சீர்த்திச் சித்திரை என்னும் மடமாது - மண்ணுலகத்தவர்களாற் கூறப்படுகிற
மிகுந்த புகழையுடைய கனகசித்திரை என்னும் மடப்பமும் அழகுமுடையாள், இன்று -
இந்நாளில், எண்ணார் இன்பக்காதலியாகி இயல்கின்றாள் - அச்சுவக்கிரீவனுக்கு மனம்
பொருந்திய இன்பக் காதலியாகவும் அமைந்து விளங்குகின்றாள், தேவிப் பெறுபட்டம் -
இராசமாதேவி என்று பெறப்படுகிற சிறப்பினையும், பெண்ணார் சாயல் பெற்றனள் -
பெண்களுக்கமையவேண்டிய அழகமைந்த அவளே அடைந்தனள், (எ - று.)

இதனால் சாதகவோலையில் சுயம்பிரபை தேவிப்பட்டம் பெறுபவள் என்ற குறிப்பால் அவள்
அச்சுவக்கிரீவனுக்கு மனைவி ஆக வியலாமை காட்டப்பட்டது.

( 77 )

இரத்தின கண்டன் இளவரசன்

316. வானோ ருட்கு மக்களொ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னென நின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்.
 

(பாடம்) 1. மடமாதர்.