பக்கம் : 240 | | (இ - ள்.) ஊனோம் உட்கும் - ஊன் பொருந்திய உடலையுடை யவர்கள் அச்சத்தையடையும்; ஒண்சுடர் நஞ்சு ஊறு ஒளி வேலோய் - மிக வருத்தத்தைச் செய்யும் நஞ்சில் தோய்க்கப்பெற்று ஒளியுடன் விளங்கும் வேற்படையை யுடையவனே, வானோர் உட்கும் - விண்ணுலகத்தவரும் கண்டு அச்சத்தையடையும், மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர் தம்முள் - புதல்வர்கள் ஓர் ஐந்நூறு பெயர்களுக்குள், ஈனோர் உட்கும் - ஈண்டுள்ள வித்தியாதரர்கள் அச்சத்தையடையும், இரத்தின கண்டன் என நின்றான் - இரத்தின கண்டன் என்று பெயரமைந்தவன், ஏனோர் உட்கும் - அசுரர் தயித்தியர் முதலிய மற்றவர்கள் அஞ்சும், இன் இளவேந்தாய் இயல்கின்றான் - இனிய இளவரசனாக விளங்குகின்றான். (எ - று.) இதனால் பவச்சுதன் அச்சுவக்கிரீவன் அகவை முதிர்ந்தமையை மக்களுண்மை கூறுமாற்றாற் கூறி, மேலும் அச்சுவக்கிரீவன் மகன் இவட்குக் கணவனாதல் கூடுமென்று குறிப்பாகக் கூறுகின்றான | ( 78 ) | மன்னன் வினாதல் | 317. | அன்னா னாயி னாதலி னன்றே யவனல்லால் என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும் இன்னா னின்னா ராள்வா னிவனென்றே அன்னா 1னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான். | (இ - ள்.) அன்னான் ஆதலின் - இரத்தின கண்டன் அத்தகையோன் ஆதலான், ஆயின் - அவன் சுயம்பிரபைக்குக் கணவனாயின், நன்றே - நல்லதேயாகும்; அவன் அல்லால் - அவன் கணவனாகாதவிடத்து; என்னான் ஆவான் - யார் தான் எவ்வாற்றானும் அவட்குத் தகுந்த கணவனாகத் தகுந்தவன் கூறுக, என்றனன் - என்று அரசன் வினாயினான், எனலோடும் - அவ்வாறு வினவியவுடனே, இன்னான் இன்னான் இவன் - இவன் இந்த நகரத்தை ஆள்பவன் இவன் இந்நகராள்வான்; என்றே - என்று, அன்னான் - அவ்வமைச்சன், அன்னாற்கு - அம்மன்னனுக்கு, அந்நகர் எல்லாம் - அந்த நகர இயல்பு எல்லாம் கூறி, அறிவித்தான் - அறிவிப்பானாயினான். |
| (பாடம்) 1. னன்னானந்நக. | | |
|
|