பக்கம் : 241
 

அரசன் இரத்தின கண்டனை ஒருவாறு ஒத்துக்கொண்டு மேலும் தகுதி உரையாரையெல்லாம்
கூறுக என அமைச்சன் வேறு மனனர் மக்களின் இயல்பையும் அவர் ஆளும்
நகரங்களையும் மன்னனுக்கு எடுத்துக் கூறினான் என்க.

( 79 )

சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்

318. மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
கையா ரெஃகிற் காரளக டம்முட் கமழ்கோதை
மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்
1கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் 2கொடுவென்றான்.
 

     (இ - ள்.) கொய்யா விம்மும் கொங்கலர் தாரோய் - கொய்து தொடுக்கப்பெற்று
மணம் வீசும் மலர்மாலையை அணிந்தவனே!. மையார் சென்னி மால்வரையாளும் -
முகில்கள் படியப்பெற்ற முடிகளைக் கொண்ட பெரிய மலைகளை அரசாட்சி செய்யும்,
வயமொய்ம்பில் - மிகுந்த வலிமையினையும், கையார் எஃகில் காளைகள் தம்முள் -
கையில் வேற்படையையுமுடைய இளைஞர்களுக்குள், கமழ் கோதை மெய்யாமேவும் -
மணம் வீசும் மாலையை யணிந்த சுயம்பிரபை வாய்மையாகக் காதலித்தற் குரிய;
மேதகுவானை - சிறப்பமைந்தவனை, மிக எண்ணி - மிகவும் ஆராய்ந்து முடிவு செய்துஇ
கொடு என்றான் - கொடுப்பாயாக என்று கூறினான். (எ - று.)

இது சடிமன்னன் பவச்சுதனுக்குக் கூறியது. கோதை - சுயம்பிரபை. மெய்யா - மெய்யாக. மே - மேன்மை. தாரோய் என்றது பவச்சுதனை விளித்தது.

( 80 )

வேறு
இதுமுதல் 329 ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்; பவச்சுதன்கூற்று.
பவனஞ்சன் மாண்பு

319. கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்.
 

(பாடம்) 1. கொய்யார் விம்மும்; 2. கோடென்றான்.