பக்கம் : 243
 

அமிழ்த பதிநாட்டு வேகரதன் என்பவனும் சிறந்தவன் என்று இயம்புகிறான்.

( 82 )

மேகபுரத்துப் பதுமரதன்

321. வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்
பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத் தேர்ப் பெயரினானை
ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்.
 

     (இ - ள்.) உருவத்தாரோய் - அழகிய மாலையை யணிந்தவனே!, வேழத்தால் -
கரும்பினாலே, பொலிந்த சோலை - விளக்கமடைந்த சோலைகளாலே சூழப்பெற்ற,
மேகமாபுரமதாளும் - மேகபுரத்தினை யரசாட்சி செய்கின்ற, ஆழித்தேர் அரவத்தானை
அரசர்கோன் புதல்வன் - உருளை பொருந்திய தேரையும், ஒலி பொருந்திய
படையையுமுடைய அரசர்கோனுடைய மகனாகிய, அம்தார் பாழித்தோள் - அழகிய
மாலையை யணிந்த பருத்த தோள்களையும், உருவச் செங்கண் - அழகிய சிவந்த
கண்களையுமுடைய, பதுமத்தேர்ப் பெயரினானை - பதுமரதன் என்னும்
பெயரையுடையவனை, வேந்தர் - அரசர்கள், ஊழித்தீ என்று உட்குவது - உலகம்
முழுமையையும் அழிக்குந் தீயென்று அஞ்சுவர், (எ - று.)

இவ்வாறு இயம்பவே இந்தப் பதுமரதன் என்பானும் தக்கார்களில் ஒருவன் என்பது பெறப்பட்டது.

( 83 )

இரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்

322. இலங்கொளி மாட வீதி யிரத்தின புரம தாளும்
உலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
அலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்
1குலங்கெழு 2குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ
டொப்பான்.
 

     (இ - ள்.) இலங்கு ஒளி மாடவீதி - விளங்குகின்ற ஒளியமைந்த மாளிகைகள்
பொருந்திய தெருக்களையுடைய, இரத்தினபுரம் அது ஆளும் - இரத்தினபுரத்தை அரசாட்சி
செய்கின்ற, உலம்கெழு வயிரத்திண்டோள்


(பாடம்) 1. கொலங்கெழு. 2. குருசில்.