ஒளி முடியரசன் செம்மல் - திரண்ட கல்லைப்போலமைந்து வயிரம் பொருந்திய திண்ணிய தோளையும் ஒளி தாங்கிய முடியையுமுடைய அரசன் மகன், அலங்கள் அம்புரவித்தானை - அசைகின்ற மாலையினையணிந்த அழகிய குதிரைப் படையை யுடையவன், அருங்கலத் தேரின் பேரன் - சுவர்ணரதன் என்னும் பெயரையுடையன், குலங்கெழு குரிசில் - நற்குடியில் தோன்றிய சிறப்பையுடையவன், கொண்டல்வான் உருமோடு ஒப்பான் - முகிலில் தோன்றுகின்ற பேரிடியை ஒத்தவன், கண்டாய் - உணர்ந்து கொள்வாயாக, (எ - று.) சுவர்ணரதன் என்னும் பெயரைத் தமிழில் பெயர்த்துச் சொல்ல விரும்பியவர் ‘அருங்கலத் தேரின் பேரன்‘ என்றார். அருங்கலம் பொன்னை ஈண்டு உணர்த்திற்று. |
(இ - ள்.) திங்கள்மால் புரிசை வேலி - திங்கள் மண்டலம் வரை யுயர்ந்துள்ள பெரிய மதிலை வேலியாகக்கொண்ட, நன்னகர்கீதம் என்னும் - நல்ல நகரமாகிய கீதமாபுரம் என்று சொல்லப்பெறுகிற; செழுநகர் அரசன் செம்மல் - செழுமை மிக்க நகரத்தினை ஆட்சிபுரியும் அரசனுடைய தலைமகன், அங்கண்மா ஞாலம் ஆளும் அரிகண்டன் - அழகிய இடமகன்ற பெரிய நிலவுலகத்தை அரசாட்சி செய்யும் அரிகண்டன் என்னும் பெயரையுடையவன், நங்கள்மால் வரையில் மேலோன் - அவன் நம்முடைய வித்தியாதர மலையரசர்களுக்குள்ளே சிறந்தவன், அவனை விண்மேல் செங்கண்மால் முனியுமேனும் - அவ்வரி கண்டனை விண்ணின் கண்ணுள்ள சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே சினந்தாலும், செய்வது ஒன்று இல்லை கண்டாய் - செய்யக்கூடியது யாதுமில்லை, உணர்ந்து கொள்வாயாக! (எ - று.) |