பக்கம் : 245
 

செய்வதொன்றில்லை எனவே அவனுடைய பேராற்றல் பெறப்பட்டது

( 85 )

திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்

324. சேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்
வாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் 1மல்லா
டேந்துதோ ளரசர் றிவனளி தாங்க னென்பான்
காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ
டொப்பான்.
 

     (இ - ள்.) செந்து எரி செம்பொன் வீதி - சிவந்து விளங்குகின்ற
செம்பொன்னாலாகிய தெருக்களையுடைய, திரிபுரம் அதனை ஆளும் - திரிபுரம் என்னும்
நகரத்தை அரசாட்சி செய்யும், வாய்ந்து எரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் -
பொருந்தி விளங்குகின்ற வைரத்தி னாலாகிய பசிய அணிகலன்களையணிந்த அரசனுடைய
மகன், நளிதாங்கன் என்பான் - நளிதாங்கன் என்னும் பெயரையுடையவன், கல்வியாற்
கடலோடு ஒப்பான் - கல்வியிற் கடல் போன்று மிக்கவன், இவன் மல்லாடு ஏந்து தோள்
அரசர் போர் ஏறு - இவன் மற்போர் புரிவதிலே புகழ்படைத்த தோள்களையுடைய
அரசர்களுக்குச் சிங்க ஏற்றினைப்போன்றவன், காய்ந்து எரிகனலின் வெய்யோன் - சினந்து
எரிகின்ற தீயினுங் கொடியவன், (எ- று.)

நளிதாங்கன் கல்வியாற் பெரியவன் மற்போர்புரிவதில் வல்லவன் மிகுந்த சீற்றமுடையவன்
என்க. அளிதாங்கன் எனப் பிரித்தலுமாம்.

சித்திரகூடத்து அரசன் மகன் ஏமாங்கதன்

325. செந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்
அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் 2சிறுவ னந்தார்
இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா.
 

(பாடம்) 1. மல்லர்.