வண்டுகள் குண்டு குண்டாகக் காணப்படுதலின் “சிறைவன் டென்னும் கருமணி“ என்றார். |
( 88 ) |
சீ நிலையத்தரசன்மகன் சித்திரரதன் |
327. | சீரணி முழவ மோவாச் 1சிரீநிலை யதனை யாளும் காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த தேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் 2பேரான் தாரணி 3மார்பனன்றெ தரணிக்கோர் திலத மாவான். |
(இ - ள்.) சீர்அணி முழவம் ஓவா - சிறப்புப் பொருந்திய அழகிய மத்தளவொலி நீங்கப்பெறாத, சிரீநிலை அதனை ஆளும் - திருநிலையம் என்னும் நகரத்தினை அரசாட்சி புரிகின்ற, கார் அணி தடக்கை வேந்தன் கான்முளை - கொடையினால் முகிலைப் போலும் அழகிய பெரிய கைகளையுடைய அரசன் மகனும், கனபொன் ஆர்ந்த தேர் அணி அரசத்தானை - அழகிய பொற்றகடுகள் பதிக்கப்பெற்ற தேரையும் இனிய ஒலி மிக்க படையையுமுடைய, சித்திரத்தேரின் பேரான் - சித்திர ரதன் என்னும் பேரையுடையவன், தார் அணி மார்பன் அன்றே - மாலையால் அழகு பெற்ற மார்பினையுடைய அவனல்லனோ, தரணிக்கோர் திலதமாவான் - உலகிற்கு மிகச் சிறந்தவனாக விளங்குகின்றவன், (எ - று.) சித்திர ரதன் மிகவும் சிறந்தவன் என்றபடி. |
கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது |
328. | கற்றவர் புகழுஞ் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும் கொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான் செற்றவர்ச் செகுக்குஞ் செய்கை 4செருவல்லான் சிங்ககேது மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான். |
( 89 ) |
(இ - ள்.) கற்றவர் புகழுஞ் சீர்த்தி - அறிஞர்களால் விதந்தோதப் பெறுகிற மிகுந்த புகழையுடைய, கனகபல்லவத்தையாளுங் கொற்றவன் சிறுவன் - கனகபல்லவம் என்னும் நகரத்தை அரசாட்சி செய்கின்ற அரசனுடைய மகனும், கோலக் குங்குமக் குவவுத்தோளான் - அழகிய |
|
(பாடம்) 1. சிறீநிலை. 2. பேரத். 3. மார்பனென்றே. ஸ்ரீநிலை சிறிநிலை. 4. செருவில்லான். |