குங்குமம் அணியப்பெற்ற பருத்த தோள்களையுடையவனும், செற்றவர்ச் செகுக்குஞ் செய்கைச் செருவல்லான் - பகைவர்களையழிக்கும் செயலாகிய போரிலே வல்லவனும் ஆகிய, சிங்ககேது - சிங்ககேது என்பவன், பிறந்த பின்னாம் - பிறந்தற்குப் பிறகுதானாம், மண்மகள் மகிழ்ந்தது என்றான் - நிலமகள் மகிழ்ச்சியையடைந்தது என்று கூறினான், (எ - று.) சிங்ககேதுவின் சிறப்பை நோக்கி நிலமகள் மகிழ்ச்சி யடைந்தனள் என்க. |
(இ - ள்.) மன்னா - அரசனே! இஞ்சிசூழ் - மதில்களாலே சூழப்பெற்ற, எரிபொன் மாடத்து - விளங்குகின்ற பொன் மாளிகைகளை யுடைய, இந்திரன் மிசைந்த நாமச் சஞ்சயம் - இந்திரன் என்ற சொல்லுக்கு மேல் சஞ்சயம் என்ற சொல் பொருந்திய, அஃதாவது இந்திரசஞ்சயம் என்கிற நகரத்தை, உடைய கோமான் தாள்முளை - அரசாட்சிசெய்கின்ற அரசனுடைய மகனும், தரணி எல்லாம் அஞ்சும்நீர் அலங்கல் வேலான் - உலகம் முழுவதும் அஞ்சுந்தன்மை பொருந்திய மாலையையணிந்த வேற்படையையுடையவனும் ஆகிய, அருஞ்சயன் அவனை - அருஞ்சயன் என்னம் பெயரையுடைவனை, நங்கள் - நம்முடைய, மஞ்சுசூழ்மலைக்கு ஓர் சூளாமணி எனக் கருதும் - முகில்கள் சூழப்பெறுகின்ற வித்தியாதர மலைகளுக்கு ஒப்பற்ற முடிமணியாக இவ்வுலகமானது மதிக்கும், (எ - று.) அருஞ்சயனை வித்தியாதர மலைக்கு ஓர் சூளாமணியாக மதிக்கும் எனவே, அவனுடைய சிறப்புப் பெறப்பட்டது. கால் முளையைத் தாள்முளை என்றார். |