பக்கம் : 25 | | முள்முளைத் திரளொடு-முள்பொருந்திய நாளங்களுடன்; முனிந்துகொண்டு-வெறுத்துக்கொண்டு; உள்முளைத்து-நீர்க்குள் மூழ்கியெழுந்து; இள அன்னம் உழக்கலால்-அன்னப் பார்ப்புக்கள் நீரைக் கலக்குதலால்; தடத்தகழி எலாம்-பெரியகழியிடமெல்லாம்; கள் முளைத்த-தேன் தோன்றலாயின (எ - று.) கண்முளைத்த தடத்த எனப் பிரித்துக் கண்கள் தோன்றி மலர்ந்தாற் போன்ற இடத்தையுடையன என்று பொருள் கூறினும் பொருந்தும். வெண்முளைப் பசுந்தாமரை-முரண்டொடை. மரஞ்செடி கொடி வகைகளுக் குள்ள, கோழரை, பொரியரை, பொகுட்டரை, முள்ளரை என்னும் நான்கு வகையுள் தாமரை முள்ளரையுடையது. தடத்த-பலவின்பால் முற்று. கழி-கடற்கரையை ஒட்டிய உப்பங்கழி. | ( 18 ) | குறிஞ்சி | 25. | காந்த ளங்குலை யாற்களி வண்டினம் 1கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ டேந்து சந்தனச் சார லிருங்கைமா மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம். | (இ - ள்.) வரைமாடு எலாம்-மலைப்பக்கங்களிலெல்லாம்; ஏந்துசந்தனம் சாரல்-உயர்ந்த சந்தனமரங்கள் செறிந்த சாரலில்; இரும்கைமா-பெரிய கையினையுடைய களிறுகள்; களிவண்டு இனம்-தம்மத நீரைப்பருகிக் களிக்கின்ற வண்டுக் கூட்டத்தை; கூந்து இளம்பிடி-கூந்தலையுடைய இளம் பிடியானைகள்; காந்தள் அம்குலையால் வீச-அழகிய காந்தட் பூங்கொத்தினால் வீசியோட்ட; குழாங்களோடு நின்று மாந்தி - மற்றை யானைக் கூட்டத்தோடு சேர்ந்து தினை முதலியவற்றை உண்டு; உறங்கும் - தூங்கும். ஆண் யானைகள் தினை முதலியவற்றைத் தின்றுவிட்டுத் தம் குழாத்துடன் உறங்குகின்றன; அவற்றின் மதநீரில் வண்டுக் கூட்டங்கள் இடைவிடாது மொய்த்துக் களிற்றின் உறக்கத்தைக் கெடுக்கின்றன; வண்டுக் கூட்டங்கள் ஆண் யானைகளின் உறக்கத்தைக் கெடுத்தல் அவற்றின்பால் அன்புள்ள பிடிகளுக்குப் பொறுக்கவில்லை. ஆகவே அவை காந்தளங் குலையினால் வண்டுக்கூட்டத்தை யோட்டி ஆண் யானை உறங்குதற்கு உதவிபுரிகின்றன. இதனால் அப்பிடிகள் களிற்றினிடத்திற் கொண்டுள்ள காதலும் அன்பும் புலனாம். மக்கட்கு அடுத்தபடியாகப் பகுத்தறிவோடுகூடிய |
| (பாடம்.) 1. விடத்தி. | | |
|
|