பவச்சுதன் - பருத்து விளங்குகின்றவாய வலியதோள்களையுடைய பவச்சுதனால், சொலப்பட்டன - கூறப்பட்டனவாகிய, ஊழியார் உரை - முறையமைந்த மொழிகளும், ஒத்துளகண்டாய் - பொருத்தமாகவே உள்ளன வென்பதை யுணர்ந்து கொள்வாயாக, (எ - று.) சுச்சுதன் சொன்னவை அச்சுவகண்டனுக்குப் பொருந்தியுள்ளன. அவை போன்று இவையும் பொருந்தியுள்ளன எனறவாறு. எனவே அச்சுவகண்டன் ஊனமுள்ளவன் என்று இவன் கூறியது உண்மையே என்றானாயிற்று. |
( 95 ) |
பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல் |
334. | ஆயி னுஞ்சிறி துண் 1டறி வண்டினம் பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன் வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர் தோயி னும்பகை யாஞ்சுடர் 2வேலினாய். |
(இ - ள்.) சுடர் வேலினாய் - ஒளிதவழுகின்ற வேற்படையை யுடையவனே! ஆயினும் சிறிது உண்டு அறி - ஆனாலும் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டியதும் இருக்கின்றது அதனையும் அறிந்துகொள்வாயாக அஃதென்னெனின், வண்டினம் பாயினும் பனிக்கும் - வண்டுக்கூட்டங்கள் மாலையிற் பாய்ந்தாலும் அதனால் வருந்துதலையடையும், படர் கோதை தன் - படர்ந்த மாலையினையணிந்த சுயம்பிரபையின், வேயினும் பணைக்கின்ற மென்தோள் - மூங்கிலைக்காட்டினும் பருத்து விளங்குகின்ற மெல்லியதோளை, பிறர் தோயினும் பகையாம் - மற்றைய அரசர்கள் சேர்ந்தாலும் அச்சுவகண்டனுடைய பகை நமக்கு உண்டாவதாம், (எ-று.) |
( 96 ) |
அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல் |
335. | வண்ட வாமுடி 3மன்னருண் மற்றவன் தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி துண்டி யானுரைப் பானுறு கின்றது விண்டு வாழுநர் மேனகு 4வேலினாய். |
|
(பாடம்) 1. அணிவண்டினம். 2. வேலோய். 3. மன்னர்கள். 4. வேலோய். |