பக்கம் : 252
 

பவச்சுதன் - பருத்து விளங்குகின்றவாய வலியதோள்களையுடைய பவச்சுதனால்,
சொலப்பட்டன - கூறப்பட்டனவாகிய, ஊழியார் உரை - முறையமைந்த மொழிகளும்,
ஒத்துளகண்டாய் - பொருத்தமாகவே உள்ளன வென்பதை யுணர்ந்து கொள்வாயாக,
(எ - று.)

சுச்சுதன் சொன்னவை அச்சுவகண்டனுக்குப் பொருந்தியுள்ளன. அவை போன்று இவையும்
பொருந்தியுள்ளன எனறவாறு. எனவே அச்சுவகண்டன் ஊனமுள்ளவன் என்று இவன்
கூறியது உண்மையே என்றானாயிற்று.

( 95 )

பிறருக்குக் கொடுப்பினும் பகையாகுமென்றல்

334. ஆயி னுஞ்சிறி துண் 1டறி வண்டினம்
பாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்
வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்
தோயி னும்பகை யாஞ்சுடர் 2வேலினாய்.
 

     (இ - ள்.) சுடர் வேலினாய் - ஒளிதவழுகின்ற வேற்படையை யுடையவனே!
ஆயினும் சிறிது உண்டு அறி - ஆனாலும் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டியதும்
இருக்கின்றது அதனையும் அறிந்துகொள்வாயாக அஃதென்னெனின், வண்டினம் பாயினும்
பனிக்கும் - வண்டுக்கூட்டங்கள் மாலையிற் பாய்ந்தாலும் அதனால் வருந்துதலையடையும்,
படர் கோதை தன் - படர்ந்த மாலையினையணிந்த சுயம்பிரபையின், வேயினும்
பணைக்கின்ற மென்தோள் - மூங்கிலைக்காட்டினும் பருத்து விளங்குகின்ற
மெல்லியதோளை, பிறர் தோயினும் பகையாம் - மற்றைய அரசர்கள் சேர்ந்தாலும்
அச்சுவகண்டனுடைய பகை நமக்கு உண்டாவதாம், (எ-று.)

( 96 )

அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்

335. வண்ட வாமுடி 3மன்னருண் மற்றவன்
தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
துண்டி யானுரைப் பானுறு கின்றது
விண்டு வாழுநர் மேனகு 4வேலினாய்.
 

(பாடம்) 1. அணிவண்டினம். 2. வேலோய். 3. மன்னர்கள். 4. வேலோய்.